முருகக் கடவுளின் வாகனமாக யானையும் இருந்திருக்கிறது!
பழந்தமிழ் இலக்கியங்களான அகநானூறு, பதிற்றுப்பத்து இதுபற்றி குறிப்பிடுகின்றன.
இவற்றை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்திருப்பது தான், விழுப்புரம் அருகே ஆனாங்கூர் பகுதியில் இருக்கும் முருகன் சிற்பம்.
இதில், யானை மீது அமர்ந்து பவனி வருகிறார் முருகன்!
இந்த சிற்பத்தின் காலம் பொது ஆண்டு 6-7 ஆகலாம். அதாவது, பல்லவர் காலம்!
தோற்றத்தில் இது இந்திரன் போலக் காணப்படினும் முருகன் சிற்பம் என்றே கூறலாம் என்கிறார் ஆய்வாளர் கோ.முத்துசாமி (ஆவணம் இதழ் 5, 1994)
அந்த வகையில் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது ஆனாங்கூர் கிராமமும், இங்கிருக்கும் இந்த முருகன் சிற்பமும்!
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இச்சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது தான் மிகப் பெரிய வருத்தம்!
( 19.10.22 புதன் கிழமை காலை நண்பர் வழக்கறிஞர் சாரதி அவர்களுடன் சென்று இந்த சிற்பத்தை பார்த்து வந்தேன்)