வியாழன், 14 ஜூலை, 2016



2016 ஆகஸ்ட் வெளியீடு 


‘அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார்+ என்பார் சேக்கிழார்.
நம் முன்னோர் பழம் ஆவணத்தை, ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து வைத்திருந்தமையை பெரியபுராணத்தின் தடுத்தாட்கொண்ட புராணம் நமக்கு விளக்கும். பின்னர் அறிவியல் வளர்ந்தது. கடுதாசிகள் எழுதப்பட்டன. இத்தகைய கடிதங்கள், வீடுகளின் எறவானம் எனப்படும் மேற்கூரையில் சொருகி வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்துத் தகவல்களைக் கொண்டுச் செல்லும் தூதுவனாக பத்திரிகைகள் அறிமுகமாயின. ஒருசிலர் முழுப் பத்திரிகையினையும் இன்னும் சிலர் இதன் நறுக்கு(கட்டிங்கு)களைப் பாதுகாப்பதில் ஆர்வங்காட்டினர். அடுத்து வந்தக் காலங்களில் இவையும் மறைந்துப் போயின. ஆவணங்களைப் பாதுகாக்கும் நம் மரபு காலப்போக்கில் மங்கியது.
பழைய பேப்பர் கடைகளுக்குப் எடைக்கு எடை போடுவதில் இருந்து தப்பிப் பிழைத்த பழைய பேப்பர்களும்  அதில் பதிவு செய்யப்பட்டச் சில செய்திகளும் இன்று ஆவணமாகியுள்ளன.


1991 முதல் நடந்த பல்வேறு சம்பவங்கள் இதில் சுவைபடத் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒரு வகையில் இந்நூலும் விழுப்புரம் வரலாறு குறித்துப் பேசும் ஒரு ஆவணம்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக