திங்கள், 27 ஜூன், 2022

ஜம்பை - வரலாற்றுச் சுரங்கம்

திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை.

சாலையின் இரண்டு பக்கமும் அடர்ந்து நிற்கும் புளிய மரங்கள். தொலைந்து போன நம்ம கனவு மாதிரி கண் முன்னாடி விரிந்து நிக்குது.

மணலூர்பேட்டை பேரூராட்சி. இதுக்கு அடுத்த ஊருதான் ஜம்பை. அழகான அமைதியான கிராமம்.

இந்த அழகுக்கும் அமைதிக்கும் காரணம், நீண்டு படர்ந்து இருக்கும் ஏரி. சுற்றிலும் இயற்கை எழிலோடு நின்னுட்டு இருக்கும் பசுமைப் படர்ந்த மலைக் குன்றுகள்.


இந்த ஊரோட பழைய பேரு வாளையூர் நகரம். ஆமாம் ங்க ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்த ஊரு நகரம் னு அழைக்கப்பட்டு வந்துச்சு.

முதலாம் ராஜராஜன் காலத்தில் அவனோட சிறப்பு பெயரால நித்தவிநோத புரம் னும் வீரராஜேந்திரன் காலத்துல வீரராஜேந்திர சோழபுரம் னும் அழைக்கப்பட்டு வந்த இந்த ஊரு சண்பை ன்னும் சண்பை எனப்படும் சண்பையான வீரராஜேந்திர சோழபுரம் னும் அழைக்கப்பட்டுச்சு.

சம்பு ங்கறது ஒரு வகை கோரைப் புல். சம்புக் காடு இருந்த பகுதி. சம்பு ஜம்பை ஆயிடுச்சு.

சங்ககாலத்துல மலையமான்கள் ஆட்சிக்கு உட்பட்டும் பல்லவர் காலத்துல அவங்களுக்கு கீழ் ஆட்சி செய்த வாணகோ அரசர்களாலும் அப்புறம் சோழர்களாலும் ஜம்பை ஆளப்பட்டு வந்துச்சு. சோழர் காலத்துல இங்க அரன்மணையும் இருந்து இருக்கு.

ஜம்பையில நிறைய கோவில்கள். காசிநாதர் ஜம்புநாதர் கயிலை நாதர் அல்லி நாதர் கமல நாதர் னு சிவாலயங்களும் சைனி அம்மன் ங்கற சமணக் கோயில் னு நிறைய இருக்கு.

ஜம்பை பழமையான நகரம் அப்படிங்கறதுக்கான உதாரணம் நிறைய பானை ஓடுகள் இருக்கிறது தான். இதுல குறியீட்டோட கூடிய ஓடும் கிடைச்சு இருக்கு.

ஏரியை ஒட்டி நிற்கும் இந்த ஜேஷ்டா மூத்த தேவி பல்லவர் காலத்தவள். இவளுக்குப் பக்கத்திலேயே பாறையில் ஒரு கல்வெட்டு. ராஷ்டிரகூட மன்னனான கன்னரத் தேவன் ஆட்சி காலத்தை சேர்ந்ததாகும்.

இங்க இருக்கும் கோயில்கள்ல ஜம்புநாதர் கோயில் குறிப்பிடத்தக்கது.


இந்தக் கோயிலுக்குள்ள போன உடனே நம்மை வரவேற்கிறது இந்த அழகான சிம்மத் தூண்.

சோழர் கலைப் பாணிக்கு எடுத்துக் காட்டான கலைநயம் மிக்க தூண்கள் கோயில தாங்கி பிடிச்சு நிக்குது.

கருவறையில அருளே உருவாகக் காட்சி தர்றாரு ஜம்புநாதர்.

அழகிய சிற்பங்களோட தொகுப்பா இருக்கு இந்தக் கோயில்.

அப்புறம் கோயில் முழுக்க நிறைய கல்வெட்டுகள்.. இவை பராந்தகன் காலம் முதல் விஜயநகரர் காலம் வரையிலானவை. அந்தந்த காலக்கட்டங்கள் ல நிகழ்ந்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகள பட்டியலிட்டு சொல்லுது இந்தக் கல்வெட்டுகள்.

ஜம்புநாதர் கோயில் வளாகத்தில் தனி சன்னதியில இருக்காங்க அகிலாண்ட ஈஸ்வரி அம்மன்.

இதோ இவை கோயில் வளாகத்தில் இருக்கும் நடுகற்கள்.. தலைப்பலி சிற்பங்கள். காளையுடன் போரிட்டு இறந்த மற்றும் கோயில் பணி தடை இல்லாமல் நடக்க தன்னையே பலி கொடுத்தவன் னு ரெண்டு பேரோட நடுகல் சிற்பங்கள் தான் இது.

அப்புறம் கோயிலுக்கு வெளியே மண்ணுக்குள் புதைஞ்சு வணங்கும் நிலையில் இருக்கும் ரெண்டு சிற்பங்கள்.. இவங்க எப்ப வெளியே வருவாங்களோ தெரியல.







சனி, 4 ஜூன், 2022

கடலூர்: கடலில் மூழ்கிய கப்பல்

நாலு வருஷத்துக்கு முன்னாடி 2018 செப்டம்பர் ல ஒரு நாள் மத்தியானம் கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து மோட்டார் படகுல ஒரு கடல் பயணம்..


இந்தக் கடல் பயணம் ங்கறது எனக்கு முதல் அனுபவம் புது அனுபவமும் கூட.


ஆனாலும் நண்பர் பாபு அவர் குடும்பத்தினர் அப்புறம் நண்பர்கள் பிரபு, பாலா தமிழ் உள்ளூர் நண்பர் கமல் னு நண்பர்கள் பட்டாளமும் கூட வந்ததால பயம் ஓரளவுக்கு குறைஞ்சது ன்னு சொல்லலாம்.


கடலூர் துறைமுகம் வரைக்கும் ஆன பயணம் இது. 


சுனாமியால பாதிக்கப்பட்ட தீவுக் கூட்டங்கள பாத்தோம்.


இதோ துறைமுகத்துத்துக்குள்ள போகுது மோட்டார் படகு.


நம்மை சுத்தியும் தண்ணீர். தனிச்சு விட்ட மாதிரி மனசுக்குள்ள பயம். மனசு படபடன்னு அடிக்குது.


அப்பதான் நண்பர் கமல் சொன்னாரு கடலூர் டைட்டானிக் கப்பலை பாக்கப் போறோம் ன்னு.


மனசுக்குள்ள இப்ப பெரிய எதிர்பார்ப்பு எட்டிப் பாக்குது.


அதோ கடலுக்குள்ள நீண்ட இரும்பு கம்பம் மாதிரி நின்னுட்டு இருந்துச்சு.



கமல் திரும்பவும் சொன்னாரு இது கம்பம் இல்ல. கடலுக்குள் மூழ்கி இருக்கும் கப்பலோட ஒரு பகுதி.


இப்ப அதுக்கு பக்கத்திலியே நம்ம படகு போகுது. சுத்தி வந்துச்சு. ஓ.. இதுதான் அந்த கடலூர் டைட்டானிக் கப்பலா?


நெருக்கத்துலப் பாத்தோம்.

1970களோட இறுதியில கடலூர் துறைமுகம் வந்த இந்த கப்பல் புயல் ல சிக்கி தரைதட்டி நின்னு இருக்கு. உடைஞ்சும் போயிருக்கு. அப்புறம் அப்டியே கடலுக்குள்ள மூழ்கிடுச்சாம்.


கப்பலோட உரிமையாளர் அப்பப்ப கடலூர் வருவாராம்.  சில்வர் பீச் ல நின்னு தன்னோட கப்பல பாத்துட்டு போவாராம். கொடும தான் இல்லீங்களா. 


கடல் பயணம் ஒரு திகிலான அனுபவம் தான். கூடவே மூழ்கி இருக்கும் ஒரு கப்பலையும் ல்ல பாத்துட்டு வந்திருக்கோம்.


இதப் பத்திய நினைவுகள் எனக்குள் ஓடிக்கிட்டு இருந்துச்சு.


அப்பதான் புதுச்சேரியில் இருந்து நண்பர் ரமணி அவர் இப்ப இல்ல காலமாயிட்டார்.


அப்ப அவர் சொன்னாரு சார் இந்த கப்பல் விஜயகாந்த் படத்துல வந்திருக்கு அப்படின்னு.


நானும் ரமணி சொன்ன பிறகு தான் பாத்தேன்.


தூரத்து இடி முழக்கம். விஜயகாந்த் நடிச்சு 1980 டிசம்பர் ல வந்த படம். தேவனாம்பட்டினம் கடற்கரையில் எடுத்தப் படம்.


இந்த படத்துல வர்ற உள்ளம் எல்லாம் தள்ளாடுதே பாட்டு. நம்மலாள இன்னிக்கும் மறக்க முடியாத பாட்டு இல்லீங்களா?


படம் ஆரம்பிச்ச 20வது நிமிஷத்துல கதாநாயகனும் கதாநாயகியும் கடற்கரையில உக்காந்து பேசுவாங்க. அப்ப அவங்க பிண்ணனியில இந்த கப்பல் முழுசா தெரியும்.

அப்புறம் இன்னொரு காட்சியில கதாநாயகி கப்பலை காமிச்சு சொல்வாங்க:


இந்த கப்பல் கூட வேற ஒரு சீமையில இருந்து வந்து தான தரைதட்டுச்சு. அந்த மாதிரி நாமும் வேற ஒரு ஊருக்கு போனாக்கா நிம்மதியா வாழலாம் னு



அப்போ கதாநாயகன் விஜயகாந்த் சொல்வாரு தரைதட்டி நிக்கற கப்பல் மாதிரி நாம நிக்க வேணாம். நடுக்கடல்ல பயணமாகுற நாட்டுப் படகு போல தலைநிமிர்ந்து வாழலாம் னு.



இதுக்கு பிறகும் கூட தூரத்து இடி முழக்கம் படத்தோட பல இடங்கள் ல இந்த கப்பல் தலை காட்டும்.


தரைதட்டி முழுசா நின்னுட்டு இருந்த கப்பலோட கடைசி பாகத்தை தான் நாலு வருஷத்துக்கு முன்னாடி நாங்க பார்த்தது.


அப்புறம் 1980கள்ல எல்லாம் இந்த கப்பல வேடிக்கை பாக்கறது தான் கடலூர் மக்களோட பொழுது போக்கா இருந்துச்சு. இப்படியா ஒரு மாசி மகத்தப்ப கடற்கரைக்கு வந்த ஒரு கூட்டம் கப்பல பாக்க மீன்பிடி படகு ல போயிருக்காங்க. அப்ப அந்த படகு கடல் ல கவிழ்ந்த விபத்து ல 16 பேர் வரைக்கும் இறந்தாங்கலாம்.


இந்த சோக நினைவ நம்மோட பகிர்ந்து கிட்டாரு கடலூர் பற்குணம் அவர்கள்.

 மாபெரும் சோகம் தான்.


அண்மையில விசாரிச்சேன். திரும்பவும் போய் அந்த கப்பல பார்க்கலாமா ன்னு. கடலூர் நண்பர்கள் சொன்னாங்க.


இப்ப அதுக்கூட இல்ல. அதுவும் கடலுக்குள் ள மூழ்கிடிச்சு ன்னு.


இப்போதைக்கு நம்ம கிட்ட எஞ்சி நிக்கறது மூழ்கிப் போன கப்பலோட நினைவுகள் மட்டும் தான்.


இதுபற்றிய அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனல் பதிவைப் பார்க்க...

https://youtu.be/1vHgofv2N-c

  

வியாழன், 2 ஜூன், 2022

செஞ்சியார் என அன்போடு அழைக்கப்படும் செஞ்சி ராமச்சந்திரன்

இன்று (ஜுன் 3) அகவை 79ல் அடியெடுத்து வைக்கிறார் செஞ்சியார்!

செஞ்சி அருகே உள்ள அவியூர் கிராமத்தில் தொடங்கியது இவரது வாழ்க்கைப் பயணம்…


திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகளுள் ஒருவர்!


இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்.


ஒன்றிய செயலாளர் முதற்கொண்டு மாவட்ட செயலாளர் வரையிலான பொறுப்புகளை திமுகவில் வகித்தவர்.


குறிப்பாக, ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்ட திமுகவின் மாவட்ட செயலாளராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


ஊராட்சி மன்றத் தலைவர் தொடங்கி மத்திய அமைச்சர் வரையிலான பல்வேறு பதவிகளை வகித்தவர்.


ஈழப் பிரச்சினையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட செஞ்சியார், அவர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தவர். ஈழத் தமிழர் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். சென்னை வந்திருந்த தமிழீழத் தலைவர் இவரது அறையில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


செஞ்சியார் அவர்களின் அரசியல் பொதுவாழ்க்கைக்கு இது 50ஆம் ஆண்டு!


இதனையொட்டி அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலுக்கு அவர் வழங்கிய நேர்காணல்.. இணைப்பில்..

https://youtu.be/7Hgf0pP6Ps8

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்..!