இதோ என்னைச் சுற்றிலும், மிகப்பெரிய நிலப்பரப்பு விரிந்து கிடக்கிறது. எரிமலைக் குழம்புகள் தணிந்தது போல – வெந்து தணிந்தது காடு! ஆங்காங்கே துருத்திக் கொண்டிருக்கும் துளைகள் அல்லது உளைகள்! பாம்பு புற்றுகளை நினைவூட்டி நம்மை பயமுறுத்துகின்றன!
இவற்றைப் பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை.. பரவசப்படலாம்! கொண்டாடலாம்!
மணற் குன்றுகள் கல்லாக இருகிப் போயிருக்கின்றன. கல்மரங்களின் வயது தான் இவற்றின் வயதும். அதாவது 20 மில்லியன் ஆண்டுகள்!
இவற்றில் ஊடாகத்தான் கல்மரங்கள் புதைந்துக் கிடக்கின்றன. இரும்பும் கலந்திருக்கிறது என்பது வியப்பு!
இவற்றிற்குப் புவியியலாளர் வைத்திருக்கும் பெயர்: கடலூர் மணற்கல்; Cuddalore Sand Stone. இது உலகம் முழுவதிலும் உள்ள அறிவியலாளர்களால் அறியப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்!
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையிலுள்ள அறிவியல் அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த அதிசத்தை நேரில் சந்தித்ததில் ரொம்பவும் சந்தோஷம்!
இவ்வுண்மைகளை விளக்கிச் சொன்ன, புவியியலாளர் ஐயா சபாரத்தினம் அவர்களுக்கும்
இங்கு அழைத்துச் சென்று படம்பிடித்த நண்பர் செல்லிப்பட்டு சதீஷ் குமார் அவர்களுக்கும் மிக்க நன்றி!