ஞாயிறு, 17 ஜூன், 2018

மக்கள் கவிஞர் பழமலய் 75

நூல்: மக்கள் கவிஞர் த.பழமலய் 75
பதிப்பாசிரியர் : எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்
பக்கங்கள் : 608
அட்டை: கெட்டி அட்டை
நன்கொடை : ரூ.500
வெளியீடு : பெருமிதம். ( பேராசிரியர் த.பழமலய் நூல்கள் வெளியீட்டு அறக்கட்டளை.
அலைப்பேசி எண்: 99 42 64 69 42)


கடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய நூல். தாமதமானாலும் தரமாக வந்திருக்கிறது. பேராசிரியர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்.

மகிழ்ச்சி.

90 பேர்களது கட்டுரைகள்  இதில் இடம் பெற்றுள்ளன.

கவிஞரின் ஆசான்கள், உடன் பயின்றவர்கள், மாணவர்கள், அன்பர்கள், உறவினர் என் பல்வேறு பூக்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

கடிதம் மட்டுமே எழுதி பழக்கப்பட்ட பலரையும் இந்நூல் மூலமாக, பேராசிரியர் அவர்கள் கட்டுரை எழுத வைத்திருக்கிறார் என்பதை நான் அறிவேன்.

கட்டுரையாளர் ஒவ்வொருவரும் புகைப்படம், அவர்தம் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் சொல்லலாம், எல்லாம் பேராசிரியர் அவர்களின் உழைப்பு தான்.

இத்தொகுப்பில் முத்தாய்ப்பாக இருப்பது
‘சரியா? சரிவா?’ எனும் தலைப்பில் ஆன நேர்காணல்: பழமலய் பழமலையைக் காண்பது. இது, கவிஞர் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலான சுவாரசியமிக்கப் பகுதி.

அதேபோல், கவிஞரின் துணைவியார் திருமதி.உமா டீச்சர் அவர்களின், 'எனக்கு இவரிடம் பிடித்ததும் பிடிக்காததும்' எனும் தலைப்பில் ஆன கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.


தமிழ் இலக்கியச் சூழலில் இப்பதிவுகள் நிச்சயம் சலசலப்புகளை ஏற்படுத்தும் என நம்பலாம்.

பதிப்பாசிரியர் உரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்: ' பழமலய் நேற்றும் பேசப்பட்டார். இன்றும் பேசப்படுகிறார். நாளையும் பேசப்பட வேண்டியவர்'.


வரும் காலங்களில் இந்நூல் குறித்தும்  நாம் நிறைய பேச இருக்கிறோம். பேசுவோம்!

நேற்று (17.06.2018) மாலை நூல் கைக்கு வந்தவுடன் பேராசிரியர் அவர்களைத் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தேன்.

'தனிப்பட்ட முறையில் உனக்கு நன்றி செங்குட்டுவன். இதற்கு விதையாகவும். தூண்டுகோலாகவும் இருந்தாய். அதனால் தான் இது சாத்தியப்பட்டுள்ளது' என்றார்.

மிக்க நன்றிங்க ஐயா!

நூல் வெளியீட்டு விழா குறித்து பேராசிரியர்  அவர்கள் அறிவிப்பார்..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக