நெகிழ்வானத் தருணம் இது.
சாலை விபத்தில் அகால மரணமடைந்த விழுப்புரம் செவிலியர் கல்லூரி மாணவி யுவப்பிரியாவுக்கு நினைவஞ்சலி!
உடன் பயின்ற சக மாணவர்களின் நிரந்தர நினைவஞ்சலி!
' யுவ தியா' நினைவு நூலகத்தின் திறப்பு விழா, இன்று (24.06.2018) காலை உணர்ச்சி மிகுந்த நிகழ்வாக நடந்தேறியது.
நூலகத்தினை பேராசிரியர் பிரபா.கல்விமணி திறந்து வைக்க, டாக்டர் பெருமாள், ஆசிரியர் சபரிமாலா ஆகியோருடன் வாழ்த்திப் பேசும் வாய்ப்பு எனக்கும் வழங்கப்பட்டது.
' உங்கள் மகள் மரணிக்கவில்லை தாயே, இங்கிருக்கும் ஒவ்வொரு மாணவர் உள்ளத்திலும், இந்த நினைவு நூலகக் கட்டடத்திலும், நூலகத்தில் உள்ள ஒவ்வொரு நூல்களிலும் உங்கள் மகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்' என யுவப்பிரியாவின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்த நான்,
' நூலக வடிவில் இப்படியான நினைவஞ்சலிக்கு முன்னின்று ஏற்பாடு செய்த செவிலியர் மாணவர்கள், உடன் நிற்கும் ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு நன்றிகளையும்' தெரிவித்துக் கொண்டேன்.
நிகழ்வில் பங்கேற்ற டாக்டர் பெருமாள், நன்கொடையாக ரூபாய்.5000 வழங்கியதோடு, கட்டடத்துக்கான மாதாந்திர வாடகைக் செலவினை ஏற்பதாக தெரிவித்தது அனைவராலும் கைத்தட்டலுடன் வரவேற்கப்பட்டது.
முடிவில் பாரி.கோபிநாத் நன்றி கூறினார்.
ஆசிரியர் இரா.மோகன சுந்தரம் உள்ளிட்ட பலரும் ஏராளமான நூல்களை வழங்கினர்.
தொடக்கமும் நன்று… தொடர்ச்சியும் சிறப்பாகவே இருக்கும்.
'யுவதியா' வுக்கு வாழ்த்துகள்…
புகைப்படங்கள்: நண்பர் ரஃபீக்.
சாலை விபத்தில் அகால மரணமடைந்த விழுப்புரம் செவிலியர் கல்லூரி மாணவி யுவப்பிரியாவுக்கு நினைவஞ்சலி!
உடன் பயின்ற சக மாணவர்களின் நிரந்தர நினைவஞ்சலி!
' யுவ தியா' நினைவு நூலகத்தின் திறப்பு விழா, இன்று (24.06.2018) காலை உணர்ச்சி மிகுந்த நிகழ்வாக நடந்தேறியது.
நூலகத்தினை பேராசிரியர் பிரபா.கல்விமணி திறந்து வைக்க, டாக்டர் பெருமாள், ஆசிரியர் சபரிமாலா ஆகியோருடன் வாழ்த்திப் பேசும் வாய்ப்பு எனக்கும் வழங்கப்பட்டது.
' உங்கள் மகள் மரணிக்கவில்லை தாயே, இங்கிருக்கும் ஒவ்வொரு மாணவர் உள்ளத்திலும், இந்த நினைவு நூலகக் கட்டடத்திலும், நூலகத்தில் உள்ள ஒவ்வொரு நூல்களிலும் உங்கள் மகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்' என யுவப்பிரியாவின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்த நான்,
' நூலக வடிவில் இப்படியான நினைவஞ்சலிக்கு முன்னின்று ஏற்பாடு செய்த செவிலியர் மாணவர்கள், உடன் நிற்கும் ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு நன்றிகளையும்' தெரிவித்துக் கொண்டேன்.
நிகழ்வில் பங்கேற்ற டாக்டர் பெருமாள், நன்கொடையாக ரூபாய்.5000 வழங்கியதோடு, கட்டடத்துக்கான மாதாந்திர வாடகைக் செலவினை ஏற்பதாக தெரிவித்தது அனைவராலும் கைத்தட்டலுடன் வரவேற்கப்பட்டது.
முடிவில் பாரி.கோபிநாத் நன்றி கூறினார்.
ஆசிரியர் இரா.மோகன சுந்தரம் உள்ளிட்ட பலரும் ஏராளமான நூல்களை வழங்கினர்.
தொடக்கமும் நன்று… தொடர்ச்சியும் சிறப்பாகவே இருக்கும்.
'யுவதியா' வுக்கு வாழ்த்துகள்…
புகைப்படங்கள்: நண்பர் ரஃபீக்.