இளம் எழுத்தாளர் சாருமதியின் நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (10.06.2018) இரவு நடந்தது.
அப்போது எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே!
விழா தொடங்கி நடந்து கொண்டிருந்தது. முதல் நூலினைப் பெற்று கொண்ட, விழுப்புரம் நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.இரா.ஜனகராஜ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
பேச்சின் ஊடாக எதிரில் அமர்ந்து இருந்த என்னைச் சுட்டிக் காட்டிய அவர், ' நண்பர் செங்குட்டுவன் மகள் புனிதவதி இன்று +2 தேர்வில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
செங்குட்டுவன் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பது நமக்குத் தெரியும். இப்போது தனது மகளை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். அவரது மகள் உயர் கல்வியிலும் நிச்சயம் சாதிக்க வேண்டும்.
அதற்கு உதவியாக ரூபாய்.10 ஆயிரத்தை செங்குட்டுவன் மகளுக்கு வழங்குகிறேன்’ என்று அறிவித்தார்.
இது எனக்கு இன்ப அதிர்ச்சியை திகைப்பை ஏற்படுத்தியது.
இந்த முன்னாள் பத்திரிகையாளன் - எழுத்தாளனின் எடை என்ன?
நெருங்கிய நண்பர்கள் சிலருக்குத்தான் தெரியும். அவர்களில் ஒருவர் தான் நமது சேர்மன் அவர்கள்.
என் மகள் தேர்ச்சி தகவல் வெளியான நிமிடம் தொடங்கி, அவரது உயர்கல்விக்கான செலவினை பகிர்ந்து கொள்வதில், தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நண்பர்கள் பலரும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகள்!
என்னையும் என் சூழலையும் நன்கு அறிந்த சேர்மன் அவர்கள், தாமாக முன்வந்து உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்.
அறிவித்தக் கையோடு, எழுத்தாளர் இரவிக்குமார் முன்னிலையில், பேராசிரியர் தா.பழமலய் கையால் உரிய தொகையையும் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்.
தக்க நேரத்தில் தக்க உதவி. நன்றிங்க தலைவரே..!
அப்போது எனக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே!
விழா தொடங்கி நடந்து கொண்டிருந்தது. முதல் நூலினைப் பெற்று கொண்ட, விழுப்புரம் நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.இரா.ஜனகராஜ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
பேச்சின் ஊடாக எதிரில் அமர்ந்து இருந்த என்னைச் சுட்டிக் காட்டிய அவர், ' நண்பர் செங்குட்டுவன் மகள் புனிதவதி இன்று +2 தேர்வில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்.
செங்குட்டுவன் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பது நமக்குத் தெரியும். இப்போது தனது மகளை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். அவரது மகள் உயர் கல்வியிலும் நிச்சயம் சாதிக்க வேண்டும்.
அதற்கு உதவியாக ரூபாய்.10 ஆயிரத்தை செங்குட்டுவன் மகளுக்கு வழங்குகிறேன்’ என்று அறிவித்தார்.
இது எனக்கு இன்ப அதிர்ச்சியை திகைப்பை ஏற்படுத்தியது.
இந்த முன்னாள் பத்திரிகையாளன் - எழுத்தாளனின் எடை என்ன?
நெருங்கிய நண்பர்கள் சிலருக்குத்தான் தெரியும். அவர்களில் ஒருவர் தான் நமது சேர்மன் அவர்கள்.
என் மகள் தேர்ச்சி தகவல் வெளியான நிமிடம் தொடங்கி, அவரது உயர்கல்விக்கான செலவினை பகிர்ந்து கொள்வதில், தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நண்பர்கள் பலரும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகள்!
என்னையும் என் சூழலையும் நன்கு அறிந்த சேர்மன் அவர்கள், தாமாக முன்வந்து உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்.
அறிவித்தக் கையோடு, எழுத்தாளர் இரவிக்குமார் முன்னிலையில், பேராசிரியர் தா.பழமலய் கையால் உரிய தொகையையும் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்.
தக்க நேரத்தில் தக்க உதவி. நன்றிங்க தலைவரே..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக