ஞாயிறு, 10 மார்ச், 2019

விழுப்புரம் தாகூர் பள்ளி ஆண்டு விழா

தந்தையின் மறைவு.
கண்களின் ஈரம் இன்னும் காயவில்லை.

தங்களின் "விழுப்புரம் தாகூர் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்க வேண்டும்" என்று திரு.இல.ரவீந்திரன் அவர்களின் அன்பு அழைப்பு...

தவிர்க்க முடியாது. அவசியம் பங்கேற்க வேண்டும். பங்கேற்றேன்.
மேடையில், நிகழ்வினை ஒருங்கிணைக்கும் பொறுப்பினையும் சார் என்னிடம் ஒப்படைத்து விட்டார்.


விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் சி.மா.பாலதண்டாயுதம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று இருந்தனர்.

மாணவர்களின் கலக்கல் கலை நிகழ்ச்சிகள். அப்பள்ளியின் மாணவனான என் மகன் சித்தார்த்தனும் கலைநிகழ்ச்சியில் வந்து சென்றான்.
மாணவர்களிடையே ஒரு சில வார்த்தைகள் பேசவும் பரிசுகள் வழங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

மனசுக்கு ஆறுதலாக இருந்தது.

மிக்க நன்றிங்க இரவீந்திரன் சார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக