ஞாயிறு, 31 மார்ச், 2019

விழுப்புரத்தின் பழைய நீதிமன்றக் கட்டிடம்

மறக்க முடியுமா..?

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் இயங்கி வந்த இந்தக் கட்டிடத்தை..!


எத்தனை வழக்கறிஞர்கள்... எத்தனை வழக்காளிகள்... எத்தனை வழக்குகள்... எத்தனை யெத்தனைத் தீர்ப்புகள்...

எப்போதும் பரபரப்புடன் தானே இந்த வளாகம் காட்சியளிக்கும்!

பத்திரிகையாளனாய் ஆயிரம் தடவைகளுக்கு மேல் இந்த வளாகத்திற்குள் வலம் வந்திருப்பேன்.

சில முக்கிய வழக்குகளுக்காக விடிய விடிய காத்திருந்த நிகழ்வுகளும் உண்டு.

ஒரே நேரத்தில் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை.

சாக்குப் பைக்குள் துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் தலை..

அத்தியூர் விஜயாவை முதன் முதலில் சந்தித்தது...

எஸ்.பி. - வழக்கறிஞர் மோதல்...

சொல்லிக் கொண்டே போகலாம்!

உங்கள் நினைவுகளிலும் ஏராளமான நிகழ்வுகள் வந்துப் போகலாம்.

உம். இத்தனையும் சுமந்து கொண்டிருந்த கட்டிடங்கள் இன்று இல்லை.

அரசு மகளிர் மேனிலைப் பள்ளியாக உருமாறி நிற்கிறது..!

(இணைப்பில் இருப்பது: கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன்பு எதற்கும் இருக்கட்டுமே என்று எடுத்து வைத்தப் புகைப்படம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக