விழுப்புரம் கோயில்களில் காலத்தால் முந்தியவை,
கைலாசநாதர் கோயில், வைகுந்தவாசப் பெருமாள் கோயில், பூந்தோட்டம் வாலீசுவரர் கோயில் மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீசுவரர் கோயில் ஆகியவைகளாம்.
இவற்றில் பசுபதீசுவரர் கோயில் தவிர்த்து மற்ற மூன்று கோயில்களிலும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களைச் சொல்லும் ஏராளமானக் கல்வெட்டுகள் இருக்கின்றன.
அப்படி என்னதான் சொல்கின்றன இக்கல்வெட்டுகள்..?
விழுப்புரம் கோயில் கல்வெட்டுகள் 1947-48ஆம் ஆண்டில், இந்திய அரசின் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன.
1980களில் ஆய்வில் ஈடுபட்ட, ஆய்வாளர் அச்சிறுப்பாக்கம் தாமரைக் கண்ணன் அவர்கள், “விழுப்புரம் நகர் கல்வெட்டுகள்” என்பதாகச் சில தகவல்களைத் தந்தார்.
வாலீசுவரர் கோயில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வாளர் அரியலூர் இல.தியாகராசன் அவர்கள் ஆவணம் இதழில் (2000ஆம் ஆண்டு) தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.
2009ஆம் ஆண்டு, கங்கைகொண்டசோழபுரம் காப்பாட்சியர் பரணன் தலைமையிலானக் குழுவினர், விழுப்புரம் கோயில் கல்வெட்டுகளை முழுமையாகப் படியெடுத்தனர்.
ஆனாலும்கூட, இத்தனை முயற்சிகளுக்கும் பின்னும்கூட, விழுப்புரம் நகர் கோயில்களின் கல்வெட்டுகளின் முழுமையானத் தகவல்கள் இன்னும் வெளிவந்த பாடில்லை!
தமிழக அரசின் தொல்லியல்துறைதான் இதற்கான முழு முயற்சிகளை,
முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
படியெடுக்கப்பட்டக் கல்வெட்டுகள் குறித்து, மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அழகிய தமிழில், கையேடாக வெளியிட வேண்டும்.
விழுப்புரத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் குறித்த ஆவணங்களும் தமிழக அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அப்போதுதான், வரலாறு மக்களைச் சென்றடையும்.
இல்லாவிட்டால், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஒரு சிலரிடமே வரலாறு சிக்கிக் கொண்டிருக்கும்..!
(இணைப்பில் இருப்பது:
விழுப்புரம் வாலீசுவரர் கோயிலின் அழகியக் கல்வெட்டு. காலம்: கி.பி.998)
கைலாசநாதர் கோயில், வைகுந்தவாசப் பெருமாள் கோயில், பூந்தோட்டம் வாலீசுவரர் கோயில் மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீசுவரர் கோயில் ஆகியவைகளாம்.
இவற்றில் பசுபதீசுவரர் கோயில் தவிர்த்து மற்ற மூன்று கோயில்களிலும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களைச் சொல்லும் ஏராளமானக் கல்வெட்டுகள் இருக்கின்றன.
அப்படி என்னதான் சொல்கின்றன இக்கல்வெட்டுகள்..?
விழுப்புரம் கோயில் கல்வெட்டுகள் 1947-48ஆம் ஆண்டில், இந்திய அரசின் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன.
1980களில் ஆய்வில் ஈடுபட்ட, ஆய்வாளர் அச்சிறுப்பாக்கம் தாமரைக் கண்ணன் அவர்கள், “விழுப்புரம் நகர் கல்வெட்டுகள்” என்பதாகச் சில தகவல்களைத் தந்தார்.
வாலீசுவரர் கோயில் கல்வெட்டுகள் குறித்து ஆய்வாளர் அரியலூர் இல.தியாகராசன் அவர்கள் ஆவணம் இதழில் (2000ஆம் ஆண்டு) தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.
2009ஆம் ஆண்டு, கங்கைகொண்டசோழபுரம் காப்பாட்சியர் பரணன் தலைமையிலானக் குழுவினர், விழுப்புரம் கோயில் கல்வெட்டுகளை முழுமையாகப் படியெடுத்தனர்.
ஆனாலும்கூட, இத்தனை முயற்சிகளுக்கும் பின்னும்கூட, விழுப்புரம் நகர் கோயில்களின் கல்வெட்டுகளின் முழுமையானத் தகவல்கள் இன்னும் வெளிவந்த பாடில்லை!
தமிழக அரசின் தொல்லியல்துறைதான் இதற்கான முழு முயற்சிகளை,
முன் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
படியெடுக்கப்பட்டக் கல்வெட்டுகள் குறித்து, மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அழகிய தமிழில், கையேடாக வெளியிட வேண்டும்.
விழுப்புரத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் குறித்த ஆவணங்களும் தமிழக அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அப்போதுதான், வரலாறு மக்களைச் சென்றடையும்.
இல்லாவிட்டால், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஒரு சிலரிடமே வரலாறு சிக்கிக் கொண்டிருக்கும்..!
(இணைப்பில் இருப்பது:
விழுப்புரம் வாலீசுவரர் கோயிலின் அழகியக் கல்வெட்டு. காலம்: கி.பி.998)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக