விழுப்புரம் ஐயனார் கோயில் குளத்தின்
கிழக்கு வாயிலில் ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார்.
மேற்கு வாயிலில் விசுவரூப ஆஞ்சநேயர் நின்றிருக்கிறார்.
தெற்கு வாயிலில் ஸ்ரீபாண்டுரங்கன் பீடம்.
வடக்கு வாயிலில் புதிய ஆஞ்சநேயர் உருவாகி வருவதாகத் தகவல்!
குளத்தின் மையப் பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகத்தின் நீராழி மண்டம்.
குளத்தின் மீதும் அதன் வாயில்கள் மீதும் தீவிர கவனம் செலுத்தியவர்கள்...
குளத்தின் உரிமையாளரான ஐயனாரை அப்படியே விட்டுவிட்டனர்.
பாருங்களேன்:
கடந்த 12 ஆண்டுகளாக இடமிருந்தும், கடைகள் மூலமான வருமானம் இருந்தும் ஐயனாருக்குச் சிலை இல்லை எனும் நிலை..!
திரு.வி.க. வீதியில் இருக்கும் இந்த ஐயனார் கோயில் இந்துசமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிறார்கள்.
பார்க்கலாம், ஐயனாருக்கும் ஒரு காலம் வராமலா போகும்..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக