ஞாயிறு, 20 அக்டோபர், 2019

தென்பெண்ணை நதியினில்

உம். மாதக்கணக்கில் அல்ல… ஆண்டுக் கணக்கில் இருக்கும்!

தென்பெண்ணை ஆற்றில் இப்படி நடைபோட்டு..!


தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து ரயில்வே பாலம் வரை… ஒரு நடை…


“இதோ பாருங்க ஐயா” – நண்பர் தமிழ் சுட்டிக்காட்டிய இடத்தில், முதுமக்கள் தாழி, புதைந்து காணப்பட்டது.


இன்னும் ஏராளமானத் தாழிகள்  மண்மூடிக் கிடக்கின்றன.


நடையின் போது, மெல்லிய, தடித்த, வாய் அகன்ற, வேலைப்பாடுகளுடன் கூடிய பானை ஓடுகள் – கால்களுக்கு இடையில் தென்பட்டன.


சேகரித்துக் கொண்டோம்.

வெயில் சுட்டெரித்தது. நான் வறண்ட ஆரம்பித்து விட்டது.

தென்பெண்ணை, ஒரு வரலாற்றுப் புதையல்!

மீண்டும், மீண்டும் இதன் மீது நடை நாம் போடலாம்..

இந்தச் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, ஆர்வத்துடன் நம்மை வழிநடத்திய, (பிடாகம்) குச்சிப்பாளையம் நண்பர், தமிழ் அவர்களுக்கும்,


வழக்கம் வரலாற்றுத் தேடலில் தன்னை இணைத்துக் கொண்டு, இன்றளவும் என்னுடன் பயணித்து வரும் தம்பி விஷ்ணு ஆகியோருக்கு நம் நன்றிகள்..! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக