விழுப்புரம் - Vizhuppuram
திண்டிவனம் - Thindivanam
செஞ்சி - Senji
ஊர்ப் பெயர்கள்: அரசாணை வெளியீடு!
ஊர்ப் பெயர்கள், தமிழ் உச்சரிப்பில் உள்ளது போன்றே ஆங்கிலத்திலும் அமைய வேண்டும். இது, தமிழக அரசின் கொள்கை முடிவு!
இதற்காக மாவட்டங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களாக, மூன்று பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இதில், திருக்கோவலூர் கவிஞர் பாரதி சுகுமாரன், ஆசிரியர் கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருடன், நாமும் இடம்பெற்று இருந்தோம்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் 2018 டிசம்பரிலும் இரண்டாவது கூட்டம் 2019 ஜனவரியிலும் நடந்தன.
200க்கும் மேற்பட்ட ஊர்ப் பெயர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதுபற்றிய பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார், அப்போதைய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன்.
இதன் மீது முடிவெடுத்துள்ள தமிழக அரசு, இதுபற்றிய அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட 40 ஊர்கள் இடம்பெற்று உள்ளன.
இனி, இந்த ஊர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் அழைக்கப்படும்.
மகிழ்ச்சி. மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி!
இதற்கான முன்னெடுப்பில் நம்முடன் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், பாவரசு பாரதி சுகுமாரன், கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருக்கு நம் நன்றிகள்..!
திண்டிவனம் - Thindivanam
செஞ்சி - Senji
ஊர்ப் பெயர்கள்: அரசாணை வெளியீடு!
ஊர்ப் பெயர்கள், தமிழ் உச்சரிப்பில் உள்ளது போன்றே ஆங்கிலத்திலும் அமைய வேண்டும். இது, தமிழக அரசின் கொள்கை முடிவு!
இதற்காக மாவட்டங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களாக, மூன்று பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இதில், திருக்கோவலூர் கவிஞர் பாரதி சுகுமாரன், ஆசிரியர் கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருடன், நாமும் இடம்பெற்று இருந்தோம்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் 2018 டிசம்பரிலும் இரண்டாவது கூட்டம் 2019 ஜனவரியிலும் நடந்தன.
200க்கும் மேற்பட்ட ஊர்ப் பெயர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதுபற்றிய பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார், அப்போதைய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன்.
இதன் மீது முடிவெடுத்துள்ள தமிழக அரசு, இதுபற்றிய அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மயிலம் உள்ளிட்ட 40 ஊர்கள் இடம்பெற்று உள்ளன.
இனி, இந்த ஊர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் அழைக்கப்படும்.
மகிழ்ச்சி. மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி!
இதற்கான முன்னெடுப்பில் நம்முடன் பங்கேற்ற விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், பாவரசு பாரதி சுகுமாரன், கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருக்கு நம் நன்றிகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக