ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் தினப்படி சேதிக்குறிப்புகளை வாசித்த போது நான் நின்று நிதானித்தது,
வள்ளுவரின் குறள்களைப் பல இடங்களில் மேற்கோள் காட்டியிருக்கிறார். குறள் முதன்முதலில் அச்சேறியது, 1812ல். ஆனால் அதற்கு முன்பே குறள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதற்கு இந்நாட்குறிப்பு சிறந்த உதாரணம்.
ஆனந்தரங்கர், பிரெஞ்சு அரசின் விசுவாசி. ஆனால், இந்த அரசின் கீழ் சென்னப்பட்டணமும் புதுச்சேரியும் பட்டபாட்டினை நேர்மையுடன் எழுதுகிறார்.
வேதபுரீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்ட அன்றே, அப்பகுதியில் உள்ள மசூதியையும் இடிக்க உத்தரவு. ஆனால், கடும் எதிர்ப்புக் கிளம்பவே அந்த முயற்சி கைவிடப்படுகிறது.
ஆனந்தரங்கர், மனசாட்சிக்கு விரோதமில்லாதவர். கடைசி வரை மதம் மாறவில்லை. இதுதொடர்பாக சம்பா கோயில் பாதிரியாரிடம் அவர் நடத்திய உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது.
“இந்த அரசுக்கு தமிழர் ஒத்தாசையில்லை” எனச் சொன்ன ஆளுநரிடம் “எந்த வெள்ளைக்காரன் ஒத்தாசை செய்தான்?” என முகத்தில் அறைந்தாற் போல் அவரால் கேட்க முடிந்தது.
இந்த நாட்குறிப்பு, நேர்மையான யோக்கியமான ஒன்றாக பாரதியால் பாராட்டப்பட்டது.
இவை, 12 தொகுதிகளாகப் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டுத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்தெல்லாம் விரிவாக எழுதும் திட்டம் இருக்கிறது. எழுதுவோம்.
நாட்குறிப்பு நாயகர் ஆனந்தரங்கப் பிள்ளையவர்களின் நினைவுதினம் இன்று…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக