அருங்காட்சியகங்கள் துறை அதிகாரியின் வரவும்... ஆய்வும்...
விழுப்புரத்தில் அருங்காட்சியகம் வந்து விடும்... நம்பிக்கைத் துளிர்த்துள்ளது...
மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் அவர்களுக்கு நம் நன்றிகள்...
தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை உதவி இயக்குனர் துளசி பிருந்தா அவர்கள் இன்று 07.01.2022 விழுப்புரம் வருகை...
பெருந்திட்ட வளாகத்திற்குள் அருங்காட்சியகம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தினை ஆய்வு செய்தார்!
கடலூர் அருங்காட்சியகக் காப்பாட்சியர் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர்.
அதாவது, அருங்காட்சியகம் அமைப்பதற்கானப் பூர்வாங்கப் பணிகள் தொடங்கி விட்டன.
அவரே சொன்னார்: இது உங்கள் மாவட்டத்தின் கால் நூற்றாண்டுக் கனவு இல்லீங்களா?"
உண்மைதான். அந்தக் கனவு நனவாகும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உதவி இயக்குனர் அவர்களின் வருகை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நமக்கு!
ஐயா ஒரிசா பாலு Uraiyur Sivagnanam Balasubramani அவர்களுக்கு இத்தருணத்தில் நமது நன்றிகள்..!
உடனிருந்த நண்பர்கள்:
திருவாமாத்தூர் கண சரவணகுமார்
Raffi NoorBasha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக