விழுப்புரம் நேரு வீதியில் இருந்து தெற்கில் பிரிகிறது கன்னியாகுளம் சாலை.
இந்த சாலை எப்பவும் பரபரப்பாகவே இருக்கும். காரணம், இந்தப் பகுதிகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்கள்.
அப்புறம், விழுப்புரத்தின் தெற்குப் பகுதியில் இருக்கும் கிராமங்களை நகரத்தோட இணைக்கும் ஒரு இணைப்புப் பாலமாகவும் இருக்கு கன்னியாகுளம் சாலை.
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னாடி, இருபுறமும் வயல்வெளிகள் சூழ்ந்த ஒரு பசுமை சாலை தான் இந்த சாலை.
குறிப்பாக, பண்ருட்டிக்குப் போகக்கூடிய பிரதான சாலை இதுதான். அதனாலேயே இந்த சாலைக்கு ஓபி ரோடு அதாவது ஓல்டு பண்ருட்டி ரோடு பழைய பண்ருட்டி சாலை என்னும் பெயரும் இருக்கு.
அப்போது விஜயா, பாபு என்று அழைக்கப்பட்ட இப்போது முருகா என்று அழைக்கப்படும் சினிமா தியேட்டர். இதைத் தாண்டுனா எல்லாம் வயல்வெளிகள் தான்.
பிரம்மாண்டமாக கிளைபரப்பி நிற்கும் காட்டுவா மரங்கள் சில நேரங்களில் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த இடத்தின் பழமையின் மிச்ச சொச்சங்கள் இவை.
இந்தச் சாலையின் ஊடாக மேற்கு கிழக்காக ஓடும் கோலியனூரான் கால்வாய். மிகவும் பிரம்மாண்டமாக இருக்குமாம். என் தந்தையார் காலம் சென்ற கோதண்டம் அவர்கள் பலமுறை சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
சரி. வார்த்தைக்கு வார்த்தை கன்னியாகுளம் ரோடு ன்னு சொல்றோம் ல.
அதுக்கு என்ன காரணம்?
இந்த சாலையின் இறுதியில் அமைந்திருக்கிறது கன்னியாத்தா என்று அழைக்கப்படும் இந்தக் கன்னியம்மன் கோயில்.
கோயிலுக்கு அருகிலுள்ளது குளம். முதல்ல பரந்து விரிந்து இருந்துச்சு. இப்போ சுருங்கிடுச்சு.
கன்னியம்மன் கோயில் குளம். அதுதான் கன்னியாகுளம் ஆகி.. இந்தச் சாலைக்கான பெயர்க் காரணம் ஆயிடுச்சு.
...மேலதிக தகவல்களுக்கு...
https://youtu.be/bPUIPdQknHQ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக