உலகப் புகழ்ப் பெற்ற கூத்தாண்டவர் திருக்கோயிலின் திருத் தோரோட்டம் நேற்று 20.04.22 காலை விமரிசையாக நடந்தது.
இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
பிற்பகலில் தேர், கூவாகம் நத்தம் பந்தலடிக்கு வந்து சேர்ந்தது.
இங்குதான் பக்தர்களின் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பிறகு என்ன நடந்தது?
பார்ப்பதற்காக நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று மாலை கூவாகம் போயிருந்தேன்.
பந்தலடி அப்போதும் களைகட்டிதான் இருந்துச்சு.பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதோ திருத்தேரில் கூத்தாண்டவர் அமைதியாக அமர்ந்து இருக்கிறார்.
அவருக்குக் காணிக்கையாக செலுத்தப்பட்ட காய்கனிகள் மாலைகள் போன்றவற்றை வாங்குவதற்கு மக்களிடையே கடும் தள்ளுமுள்ளு.
போலீசார் தடியடி. பெண்மணி ஒருவருக்குக் கால் முறிந்தக் காட்சிகளைப் பார்த்தோம்.
மாலை ஆறு மணியைக் கடந்து விட்டது. தேர் முன்னும் பின்னும் அசைகிறது.
இதோ காளி இருக்கும் திசையின் ஊடாக அரவான் புறப்பட்டு விட்டார்.
வயல்வெளிகளைக் கடந்து தேர் வேகம் எடுக்கிறது.பொதுமக்களும் பின் தொடருகிறார்கள்.
ஏரிக்கரையின் அருகே வந்தவுடன் தேர் நிற்கிறது.
அரவானின் அங்கங்கள் ஒவ்வொன்றாக அகற்றப்படுகிறது. ஆமாம் அரவான் களப்பலி ஆரம்பம்.
இதோ அரவானின் சிரசு கீழே இறக்கப்படுகிறது. அப்போது அரவான் முகம் வெள்ளைத் துணியால் மூடப்படுகிறது.
பக்தர்களிடையே பெரும் சோகம். கவலை தோய்ந்த முகத்துடன் அங்கிருந்து கலைந்து செல்கின்றனர்.
அரவான் சிரசு இரவு நீண்ட நேரம் இங்கிருக்கும். பிறகு காளியின் அருளால் கண் திறக்கப்படும். பாரதம் படிக்கப்படும்.
மீண்டும் உயிர்த்தெழுந்த அரவான் ஊருக்குள் செல்வார்.
முழு வீடியோ பார்க்க:
https://youtu.be/kimnI8zStLY
வீடியோ: ப.ரே.ம. கிருஷ்ணமூர்த்தி