கூவாகம்… கடந்த 6ம் தேதி தான் தம்பி விஷ்ணுவுடன் போய் வந்தேன்.
ஆனாலும் இருப்புக் கொள்ளவில்லை இன்று 09.04.22 சனிக்கிழமை அதிகாலை மீண்டும் பயணம். இந்த முறை நண்பர் சரவணகுமார் உடன்.
கூவாகம் ஏரிக்கரையில் காளி கோயில். அரவான் களப்பலியும் அரவான் மீண்டும் கண் திறத்தலும் இங்கு தான்!
கோயில் எல்லாம் இல்லை. வெட்டவெளி தான். இதோ பிரம்மாண்டமாக நிற்கிறாள் பல்லவர் கால கொற்றவை.
கொற்றவையின் வலது கரத்தின் கீழே அரிகண்ட சிற்பம்!
கூவாகத்தில் நடக்கும் அரவான் களப்பலி நம் கண் முன்னே வந்து நிற்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தன்னை பலியிடுதல் எனும் வழிபாடு இன்று கூத்தாண்டவர் திருவிழாவாக கூவாகத்தில் நிலைபெற்றுள்ளது.
அருகிலேயே அழகான மூத்ததேவியின் சிற்பம். கீழே கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தொடர்பாகவோ அல்லது இக்கோயில் திருவிழா தொடர்பானப் பதிவுகளிலோ மேற்காணும் கொற்றவை மற்றும் மூத்ததேவி சிற்பங்கள் இதுவரை பேசப்பட்டாகத் தெரியவில்லை.
இதுதொடர்பான அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனலின் பதிவினைக் கீழ்க்கண்ட இணைப்பில் பார்க்கலாம்…
https://youtu.be/R7lmhdvqVc4
பயணத்தில் உதவிய நண்பர்கள்
Veera Vishnu
திருவாமாத்தூர் கண சரவணகுமார்
ஆகியோருக்கு நன்றிகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக