விழுப்புரத்தில் அருங்காட்சியகம்… இது ஒரு நீண்ட பயணம்…
இந்தப் பயணத்தை 1992இல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தவர் அன்றைய பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நினைவில் வாழும் தமிழறிஞர் கொடுமுடி சண்முகன் அவர்கள்!
2005இல் இந்தப் பயணம் முக்கிய கட்டத்திற்குச் சென்றது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் அருங்காட்சியகம் அமைப்பதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டார். ஆனால் முற்றுபெறவில்லை!
2018- அருங்காட்சியகம் பயணம் தனது மைல் கல்லைத் தொட்டது! கையெழுத்து இயக்கம் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் வரையிலாகவும்…
2021 ஆகஸ்டில் மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களது சந்திப்பு வரை இது தொடர்ந்தது.
நமது நீண்ட பயணம் இதோ அருங்காட்சியகம் எனும் முக்கிய சந்திப்பினை வந்தடைந்து இருக்கிறது!
மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்.
இத்தருணத்தில் இப்பயணம் வெற்றிபெற உறுதியாக இருந்த மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் அவர்களுக்கும்,
அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் நம் நன்றிகள் உரித்தாவதாக!
குறிப்பாக இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய 02.04.22 சனிக்கிழமை இந்து தமிழ் திசையில் ஆவணப்படுத்தி இருக்கும் பத்திரிகையாளர் நண்பர் எஸ்.நீலவண்ணன் அவர்களுக்கும் நம் நன்றிகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக