சேலத்துக் கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா...
சேலம் சுகவனபுரியில் 1874 ஜுலை 27ம் தேதி பிறந்தவர்.
விடுதலைப் போராட்ட வீரர்.
பாரதியின் சம காலத்தவர்.
பாரதியின் மறைவுக்கு சுதேச மித்திரனில் இரங்கற்பா எழுதிய ஒரே கவிஞர்.
இவர் நடத்திய "வீரபாரதி" இதழை தடை செய்தது ஆங்கிலேய அரசாங்கம்.
காந்தி, திருவண்ணாமலை வந்த போது, வரவேற்புப் பத்திரம் வாசித்தவர்.
ராஜாஜியால் "ராஜரிஷி" எனப் புகழப் பெற்றவர்.
"மதுவிலக்குச் சிந்து" பாடியவர்.
மக்களைத் திரட்டி மதுவிலக்கு மாநாடு நடத்தியவர்.
ராஜாஜியின் மதுவிலக்கு அமலாக்கத்திற்குத் தூண்டுகோலாக இருந்தவர்.
க்ஷத்திரியன் இதழை நடத்தியவர்.
இறுதிக் காலத்தை திருவண்ணாமலையில் கழித்த இவர், தனது 99வது வயதில் 7.12.1964இல் காலமானார்.
திருவண்ணாமலை இடுகாடுகளுக்கு மத்தியில் தியாகி அர்த்தநாரீச வர்மாவின் சமாதி இதோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக