திருமிகு. ம.அரவிந்த் ஐஏஎஸ் அவர்கள்.. தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை ஆணையர்... இன்று 6.8.23 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விழுப்புரம் வருகை தந்தார்!
சர்க்யூட் ஹவுசில் ஆணையரைச் சந்தித்த நான், 2005ஆம் ஆண்டில் இருந்து அருங்காட்சியகத்திற்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை எடுத்துச் சொன்னேன்...
உன்னிப்பாகக் கவனித்த ஆணையர், “வருவதற்கு முன்பாகக் கூட உங்கள் மின்னஞ்சல் பார்த்துவிட்டு தான் வந்தேன்” என்றார். மகிழ்ச்சி!
தொடர்ந்து, பெருந்திட்ட வளாகத்தில் ஏற்கனவே அருங்காட்சியகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆணையர் பார்வையிட்டார்.
பின்னர், கோலியனூரில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...
ஆனாலும், இன்னும் ஏதாவது இடங்கள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் தெரியப்படுத்துங்கள் என வருவாய்த் துறையினரைக் கேட்டுக்கொண்டார்.
அங்கிருந்துப் புறப்படும் போது அவரிடம் சொன்னேன்: விழுப்புரம் அருங்காட்சியகத்திற்கான அறிவிப்பு மற்றும் அரசாணை வெளியிடப்பட்டு ஓராண்டு ஆகிறது. இடத்தை முடிவு செய்து பணிகளை விரைவுப்படுத்துங்கள் சார்.”
“கண்டிப்பாக” என்றார். நம்முடைய கால் நூற்றாண்டுக் கனவு நனவாகும் அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்..!
(நாள் முழுவதும் உடனிருந்து புகைப்படங்கள் எடுத்து உதவிய நண்பர் ஜவகர் அவர்களுக்கு மிக்க நன்றி!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக