ஞாயிறு, 30 ஜூலை, 2023

விழுப்புரம் அருங்காட்சியகம்: துறையின் திடீர் கோரிக்கை

 பெரிய அளவிலான அருங்காட்சியகம் அமைக்க 2 ஏக்கர் நிலம் வேண்டும்.. அருங்காட்சியகங்கள் துறை திடீர் கோரிக்கை!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு அரசு அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் அவர்கள், இப்படி ஒரு கோரிக்கையை அண்மையில் முன்வைத்திருக்கிறார்!

2022 ஜனவரியில் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்து, ஒப்புக்கொள்ளப்பட்ட இடம் தான் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் இருப்பது.

எல்லாம் முடிந்து, நிலநிர்வாக ஆணையரின் அனுமதிக்காக மட்டுமே காத்திருக்கும் சூழலில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து அருங்காட்சியகங்கள் துறை இப்படியான ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது.

பெரிய அளவிலான அருங்காட்சியகம் எனவே கூடுதல் இடம் தேவை: ஒருவேளை நியாயமானது தான்! ஆனால், அவர்கள் சொல்லியிருக்கும் காரணம் தான் விசித்திரமானது.

பெருந்திட்ட வளாகம் நெடுஞ்சாலையில் இருந்து உள்ளடங்கி இருப்பதால் பார்வையாளர்கள் வருவதற்குக் குறைவான வாய்ப்பு இருக்கிறதாம்!

அடப்பாவமே! இங்கேயே பார்வையாளர்களுக்கு வாய்ப்பு குறைவு என்றால், விழுப்புரத்துக்கு வெளியே தேசியநெடுஞ்சாலையில் வைத்தால் யார் வருவார்கள்?

‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என ரோட்டைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டியதுதான்!

இதையெல்லாம் அருங்காட்சியகத் துறைக்கு யார் தான் புரிய வைப்பது?

ஆனாலும் ஊதுகிற சங்கை ஊதுவோம் என்று அருங்காட்சியகங்கள் துறை ஆணையருக்கு மின்னஞ்சல் ஒன்றை நேற்று (29.07.23)  அனுப்பி இருக்கிறேன்..!

அதுதொடர்பான இன்றைய 30.07.23 பத்திரிகை செய்திகள்... 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக