கொல்லியங்குணம். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே இருக்கிறது.
இங்குதான் தமிழ்நாடு காவல்துறையின் காவலர் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் பயிற்றுனர்களாக இருக்கக்கூடிய ஆய்வாளர் திருமதி பிரபாவதி, உதவி ஆய்வாளர் நண்பர் திரு.அரிதாசு ஆகியோரின் அன்பு அழைப்பு. நேற்று மாலை நானும் நண்பர் பத்திரிகையாளர் சுரேஷும் சென்றிருந்தோம்.
காவல் துறை – பத்திரிகையாளர் இடையேயான அணுகுமுறை குறித்து விளக்க உரை.
கடந்த காலங்களில் இரு துறையினரிடமும் நிலவிய நட்பு, உரசல் போன்ற விசயங்களை பட்டியலிட்டேன்.
ஒரு வகையில் இது, என்னைப் புதுப்பித்துக் கொள்வதாக இருந்தது. மகிழ்ச்சி.
அப்புறம், இங்குப் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் காவலர்கள் கடலூர் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அறிந்தேன்.
“ கடலூருக்கும் வேலூருக்கும் வரலாற்று ரீதியில் தொடர்பு இருக்கிறது” என்று பேச்சின் ஊடாகக் குறிப்பிட்ட நான்,
“வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டி அமர்ந்தது கடலூர். அவர்களைஅவர்களை விரட்டி அடிக்க முதலலில் புரட்சி ஏற்பட்ட இடம் வேலூர்” என்பதையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் இருந்து நீங்கள் வந்து இருக்கிறீர்கள் என்று சொன்னபோது காவல் மாணவர்களிடம் உற்சாகம் கரைபுரண்டது.
காவல் துறையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் இந்த இளைஞர்கள் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ. சந்திக்க வேண்டியவை, சாதிக்க வேண்டியவை நிறைய…
இவர்களுக்கு நம் வாழ்த்துகள்…
புகைப்படங்கள்: ப.ரே.ம. கிருஷ்ணமூர்த்தி
இங்குதான் தமிழ்நாடு காவல்துறையின் காவலர் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் பயிற்றுனர்களாக இருக்கக்கூடிய ஆய்வாளர் திருமதி பிரபாவதி, உதவி ஆய்வாளர் நண்பர் திரு.அரிதாசு ஆகியோரின் அன்பு அழைப்பு. நேற்று மாலை நானும் நண்பர் பத்திரிகையாளர் சுரேஷும் சென்றிருந்தோம்.
காவல் துறை – பத்திரிகையாளர் இடையேயான அணுகுமுறை குறித்து விளக்க உரை.
கடந்த காலங்களில் இரு துறையினரிடமும் நிலவிய நட்பு, உரசல் போன்ற விசயங்களை பட்டியலிட்டேன்.
ஒரு வகையில் இது, என்னைப் புதுப்பித்துக் கொள்வதாக இருந்தது. மகிழ்ச்சி.
அப்புறம், இங்குப் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் காவலர்கள் கடலூர் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அறிந்தேன்.
“ கடலூருக்கும் வேலூருக்கும் வரலாற்று ரீதியில் தொடர்பு இருக்கிறது” என்று பேச்சின் ஊடாகக் குறிப்பிட்ட நான்,
“வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டி அமர்ந்தது கடலூர். அவர்களைஅவர்களை விரட்டி அடிக்க முதலலில் புரட்சி ஏற்பட்ட இடம் வேலூர்” என்பதையும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் இருந்து நீங்கள் வந்து இருக்கிறீர்கள் என்று சொன்னபோது காவல் மாணவர்களிடம் உற்சாகம் கரைபுரண்டது.
காவல் துறையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் இந்த இளைஞர்கள் இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ. சந்திக்க வேண்டியவை, சாதிக்க வேண்டியவை நிறைய…
இவர்களுக்கு நம் வாழ்த்துகள்…
புகைப்படங்கள்: ப.ரே.ம. கிருஷ்ணமூர்த்தி