செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஒரிசா பாலு அவர்களுடன் சந்திப்பு

இன்று (29.01.19) மாலை விழுப்புரம் வந்த சூழலியல் ஆய்வாளர் ஐயா ஒரிசா பாலு அவர்களுடன் ஓர் இனிய சந்திப்பு.


நண்பர்கள் பாபு, அகிலன், தினகர், கிருஷ்ணா, கோபி, தமிழ், விஷ்ணு ஆகியோருடன் பாலு அவர்கள் நீண்ட நேரம் உரையாடினார்.

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டிய, தமிழர் நிலங்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியங்கள், அவர் உரையாடலின் ஊடாக வெளிப்பட்டது.

மேலும், விழுப்புரத்துடனான தனது நெருக்கம் குறித்துச் சிலாகித்த பாலு அவர்கள், நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.

மகிழ்ச்சி. அவருக்கும் எங்களுக்கும்!

நமது அருங்காட்சியகம் தொடர்பான பணிகளுக்கு தமது இதய பூர்வமான வாழ்த்தினையும் ஆதரவையும் தெரிவித்தார்.

நன்றிங்க ஐயா...

அப்புறம், எனது "திணிக்கப்பட்டதா திராவிடம்?" நூலினை ஐயா பாலு அவர்களிடம் வழங்கியதில் எனக்கும் மகிழ்ச்சியே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக