விழுப்புரம் அருகே உள்ள செ.கொத்தமங்கலம் கிராமம்.
இரண்டாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியான, வரலாறு கொண்ட சிறப்பு வாய்ந்த கிராமம்.
முதுமக்கள் தாழிகள் முதற்கொண்டு பல்லவர் சோழர் நாயக்கர் காலச் சிற்பங்கள் வரை ஏராளமான வரலாற்றுப் புதையல்களைக் கொண்டுள்ளது கொத்தமங்கலம் கிராமம்.
இந்தக் கிராமத்தையும் இங்குள்ள வரலாற்றுத் தடயங்களை நாம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்வையிட்டோம்.
பார்வையிட்டோம், பத்திரிகைகளில் ஆவணப்படுத்தினோம். நம் கடமை அத்துடன் முடிந்து விட்டதா?
இல்லை, தொடர்ந்தது. கொத்தமங்கலம் கிராமத்தில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பினோம்.
கூடவே, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் இது தொடர்பான புகாரினை அனுப்பி வைத்தோம்.
இதன் தொடர்ச்சியாக, முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து இன்று நமக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
அதில், “ கொத்தமங்கலம் பகுதியில் அகழ்வாய்வு மேற் பரப்பினை ஆய்வு செய்திடவும், மூத்த தேவி சிற்பம் உள்ளிட்ட வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்து அறிக்கை உடன் சமர்ப்பிக்குமாறு தொல்லியல் அலுவலர் (பொறுப்பு) பொ.பாஸ்கர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
கொத்தமங்கலத்தில் உள்ள வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது…
இரண்டாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியான, வரலாறு கொண்ட சிறப்பு வாய்ந்த கிராமம்.
முதுமக்கள் தாழிகள் முதற்கொண்டு பல்லவர் சோழர் நாயக்கர் காலச் சிற்பங்கள் வரை ஏராளமான வரலாற்றுப் புதையல்களைக் கொண்டுள்ளது கொத்தமங்கலம் கிராமம்.
இந்தக் கிராமத்தையும் இங்குள்ள வரலாற்றுத் தடயங்களை நாம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பார்வையிட்டோம்.
பார்வையிட்டோம், பத்திரிகைகளில் ஆவணப்படுத்தினோம். நம் கடமை அத்துடன் முடிந்து விட்டதா?
இல்லை, தொடர்ந்தது. கொத்தமங்கலம் கிராமத்தில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்குக் கடிதங்கள் அனுப்பினோம்.
கூடவே, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் இது தொடர்பான புகாரினை அனுப்பி வைத்தோம்.
இதன் தொடர்ச்சியாக, முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து இன்று நமக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
அதில், “ கொத்தமங்கலம் பகுதியில் அகழ்வாய்வு மேற் பரப்பினை ஆய்வு செய்திடவும், மூத்த தேவி சிற்பம் உள்ளிட்ட வரலாற்றுத் தடயங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்து அறிக்கை உடன் சமர்ப்பிக்குமாறு தொல்லியல் அலுவலர் (பொறுப்பு) பொ.பாஸ்கர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
கொத்தமங்கலத்தில் உள்ள வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக