செவ்வாய், 1 ஜனவரி, 2019

பனை மலைக் கோயிலில் ழுவோ துப்ராயல்

இன்றைக்குச் சரியாக 103 ஆண்டுகளுக்கு முன்பு…

1915 ஜனவரி 1ஆம் தேதியன்று, விழுப்புரத்தையடுத்தப் பனைமலை கிராமத்துக்கு வருகிறார், பிரெஞ்சுப் பேராசிரியர் வரலாற்று ஆய்வாளர் ழுவோ துப்ராய் அவர்கள்,

அங்குள்ளக் குன்றின் மீது ஏறி நின்று பார்க்கிறார். வியந்து போகிறார்.

இதோ இந்தச் சிவாலயம், காஞ்சி கைலாசநாதர் கோயிலை ஒத்திருக்கிறதே!

ஏற்கனவே 1890இல் பனைமலைக் கோயிலின் கல்வெட்டுகளைப் படித்த, ஆய்வறிஞர் ஹுல்ஷ், சில ஐயங்களை எழுப்பியிருந்தார்.

இப்போது அவற்றிற்கு விடை கண்டார் ழுவோ துப்ராய்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னன் இராஜசிம்மன்தான், பனமலைக் கோயிலையும் கட்டியிருக்கிறான்.

பிரெஞ்சுப் பேராசிரியரின் ஆய்வு, பனைமலைக் கோயிலையும், அங்குள்ளக் கல்வெட்டுத் தகவல்களையும் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தது.

வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது பனைமலை…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக