புதன், 20 நவம்பர், 2019
ஞாயிறு, 17 நவம்பர், 2019
எமபுரமா... விழுப்புரம்..?
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று…
“எமப்புரமான விழுப்புரத்தில் பணியாற்றுவதே சவால் தான்”
பத்திரிகையாளர் நண்பர் நீலவண்ணன்
அவர்களின் பதிவு இது!
விழுப்புரத்துக்கு என்று எவ்வளவோ பெருமைகள். இதையெல்லாம் பொறுக்க மாட்டாத எவனோ ஒரு வழிப்போக்கன் எப்பவோ சொல்லிச் சென்றது, “விழுப்புரம் எமப்புரம்”.
உண்மையில், அரசுத் துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஒரு சொர்க்க பூமி!
இங்குப் பணியாற்றிய வருவாய், காவல் துறை அதிகாரிகள் பலரும் தங்கள் பணிக்காலத்திற்குப் பிறகு இங்கேயே செட்டிலாகி இருக்கின்றனர்.
ஏன், கேரளாவைச் சேர்ந்த டிஜிபி ஒருவரே விழுப்புரத்தில் செட்டிலானார் (அவர் இப்போது உயிருடன் இல்லை) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
விழுப்புரம் மாவட்டத்தின் உள்பகுதியிலும் கிழக்குக் கடற்கரை சாலையிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்த அதிகாரிகள் பற்றி பத்திரிகை நண்பர்களுக்குத் தெரியாதது இல்லை!
அதே நேரம், எதற்கும் ஆசைப்படாமல் யாருக்கும் கார் கதவினைத் திறந்துவிடாமல் யாரைப் பார்த்தும் கூழைக்கும்பிடு போடாமல்…
கடுமையான அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் குறைந்த காலமே விழுப்புரத்தில் சிறப்புடன் பணியாற்றிச் சென்ற அசோக் வர்தன் ஷெட்டி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும் ராஜீவ் குமார் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளையும் பார்த்த வரலாறும் விழுப்புரத்துக்கு இருக்கிறது.
அன்பு நண்பரே… அரசுத்துறை அதிகாரிகள் குறித்த உங்களின் பார்வை எப்படியும் இருக்கலாம். உங்கள் அனுபவத்தின் பாற்பட்டது. அதில் நாங்கள் தலையிட முடியாது.
அதற்காக, வந்தாரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும், அதுவும் வளமுடன் வாழ வைக்கும் விழுப்புரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம்: அன்புடன் வேண்டுகிறேன்!
நண்பரே, முடிந்தால் உங்களால் குறிப்பிடப்படும் அந்த அதிகாரி, தனதுப் பணிக்காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டார் என பத்திரிகையில் எழுதுங்கள்! எழுதமுடியும்! எழுதலாம்!
விழுப்புரம் மாவட்டத்தின் முதல் ஆட்சியரான திரு.அசோக் வர்தன் ஷெட்டி வந்த புதிதில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றியும் ஓராண்டில் அவர் ஏன் தூக்கப்பட்டார் என்பதையும் நேர்மையாக நான் பதிவு செய்து இருக்கிறேன்!
அன்பு நண்பர் நீலவண்ணன், விழுப்புரத்தை "எமபுரம்" என்று குறிப்பிட்டதால் தவிர்க்க முடியாத பதிவு இது!
“எமப்புரமான விழுப்புரத்தில் பணியாற்றுவதே சவால் தான்”
பத்திரிகையாளர் நண்பர் நீலவண்ணன்
அவர்களின் பதிவு இது!
விழுப்புரத்துக்கு என்று எவ்வளவோ பெருமைகள். இதையெல்லாம் பொறுக்க மாட்டாத எவனோ ஒரு வழிப்போக்கன் எப்பவோ சொல்லிச் சென்றது, “விழுப்புரம் எமப்புரம்”.
உண்மையில், அரசுத் துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஒரு சொர்க்க பூமி!
இங்குப் பணியாற்றிய வருவாய், காவல் துறை அதிகாரிகள் பலரும் தங்கள் பணிக்காலத்திற்குப் பிறகு இங்கேயே செட்டிலாகி இருக்கின்றனர்.
ஏன், கேரளாவைச் சேர்ந்த டிஜிபி ஒருவரே விழுப்புரத்தில் செட்டிலானார் (அவர் இப்போது உயிருடன் இல்லை) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
விழுப்புரம் மாவட்டத்தின் உள்பகுதியிலும் கிழக்குக் கடற்கரை சாலையிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்த அதிகாரிகள் பற்றி பத்திரிகை நண்பர்களுக்குத் தெரியாதது இல்லை!
அதே நேரம், எதற்கும் ஆசைப்படாமல் யாருக்கும் கார் கதவினைத் திறந்துவிடாமல் யாரைப் பார்த்தும் கூழைக்கும்பிடு போடாமல்…
கடுமையான அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் குறைந்த காலமே விழுப்புரத்தில் சிறப்புடன் பணியாற்றிச் சென்ற அசோக் வர்தன் ஷெட்டி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும் ராஜீவ் குமார் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளையும் பார்த்த வரலாறும் விழுப்புரத்துக்கு இருக்கிறது.
அன்பு நண்பரே… அரசுத்துறை அதிகாரிகள் குறித்த உங்களின் பார்வை எப்படியும் இருக்கலாம். உங்கள் அனுபவத்தின் பாற்பட்டது. அதில் நாங்கள் தலையிட முடியாது.
அதற்காக, வந்தாரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும், அதுவும் வளமுடன் வாழ வைக்கும் விழுப்புரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம்: அன்புடன் வேண்டுகிறேன்!
நண்பரே, முடிந்தால் உங்களால் குறிப்பிடப்படும் அந்த அதிகாரி, தனதுப் பணிக்காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டார் என பத்திரிகையில் எழுதுங்கள்! எழுதமுடியும்! எழுதலாம்!
விழுப்புரம் மாவட்டத்தின் முதல் ஆட்சியரான திரு.அசோக் வர்தன் ஷெட்டி வந்த புதிதில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றியும் ஓராண்டில் அவர் ஏன் தூக்கப்பட்டார் என்பதையும் நேர்மையாக நான் பதிவு செய்து இருக்கிறேன்!
அன்பு நண்பர் நீலவண்ணன், விழுப்புரத்தை "எமபுரம்" என்று குறிப்பிட்டதால் தவிர்க்க முடியாத பதிவு இது!
திங்கள், 11 நவம்பர், 2019
எஸ்.மேட்டுப்பாளையம் - குறியீடுகளுடன் பானை ஓடுகள்
அடடா… மகிழ்ச்சி… மகிழ்ச்சி…
நமக்கு மட்டுமல்ல… தமிழ்கூறும் நல்லுலகிற்கும் தான்!
கடந்த நவம்பரில் நமது களப் பயணத்தை செ.கொத்தமங்கலம் கிராமத்தில் தொடங்கினோம். இதோ… ஓராண்டாகிறது… இன்னமும் தொடர்கிறது, நம் பயணம்!
செ.கொத்தமங்கலம் தொடங்கிப் பல இடங்களில் உடைந்தத் தாழிகளை, கருப்பு சிவப்பு ஓடுகளின் சில்லுகளைத்தான் பார்க்க முடிந்தது. குறிப்பாக எழுத்துப் பொறிப்புகளைக், குறியீடுகளை நம்மால் (இங்கு நம்மால் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்) காண இயலவில்லை.
அந்த ஏக்கத்தை எஸ்.மேட்டுப்பாளையம் இப்போது தீர்த்து வைத்துள்ளது.
முழுமையானத் தாழிகளை நம்மால் பார்க்க முடிந்தது.
குறியீடுகளுடன் கூடிய ஓடுகளும் கிடைத்துள்ளன. மகிழ்ச்சி தானே..!
கி.மு.2-3 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஏறக்குறைய 2300 ஆண்டுகள்!
தமிழ் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது பூவரசங்குப்பத்தை அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையம்.
ஓடுகளின் மீது காணப்பட்டவை கீறல்கள் அல்ல குறியீடுகள் தான் என்பதில் தொடங்கி நமது அனைத்து விதமான ஐயங்களையும் தீர்த்து வைத்து, நமக்கு உதவியாக இருந்த, இருந்து வருகின்ற
தமிழகத்தின் தொல்லியல் அறிஞர் பெருமக்களான மதிப்பிற்குரிய திரு.ராஜகோபால் சுப்பையா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திரு.து.துளசிராமன் அவர்களுக்கும் நாம் பெரிதும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
குறியீடுகள் மட்டுமல்ல… பிற்கால எழுத்தமைதிக்குச் (15-16ஆம் நூற்றாண்டு)சான்றாக விளங்கக் கூடிய ஓடும் கண்டறிந்து இருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
The new Indian express 07.11.19
நமக்கு மட்டுமல்ல… தமிழ்கூறும் நல்லுலகிற்கும் தான்!
கடந்த நவம்பரில் நமது களப் பயணத்தை செ.கொத்தமங்கலம் கிராமத்தில் தொடங்கினோம். இதோ… ஓராண்டாகிறது… இன்னமும் தொடர்கிறது, நம் பயணம்!
செ.கொத்தமங்கலம் தொடங்கிப் பல இடங்களில் உடைந்தத் தாழிகளை, கருப்பு சிவப்பு ஓடுகளின் சில்லுகளைத்தான் பார்க்க முடிந்தது. குறிப்பாக எழுத்துப் பொறிப்புகளைக், குறியீடுகளை நம்மால் (இங்கு நம்மால் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்) காண இயலவில்லை.
அந்த ஏக்கத்தை எஸ்.மேட்டுப்பாளையம் இப்போது தீர்த்து வைத்துள்ளது.
முழுமையானத் தாழிகளை நம்மால் பார்க்க முடிந்தது.
குறியீடுகளுடன் கூடிய ஓடுகளும் கிடைத்துள்ளன. மகிழ்ச்சி தானே..!
கி.மு.2-3 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஏறக்குறைய 2300 ஆண்டுகள்!
தமிழ் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது பூவரசங்குப்பத்தை அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையம்.
ஓடுகளின் மீது காணப்பட்டவை கீறல்கள் அல்ல குறியீடுகள் தான் என்பதில் தொடங்கி நமது அனைத்து விதமான ஐயங்களையும் தீர்த்து வைத்து, நமக்கு உதவியாக இருந்த, இருந்து வருகின்ற
தமிழகத்தின் தொல்லியல் அறிஞர் பெருமக்களான மதிப்பிற்குரிய திரு.ராஜகோபால் சுப்பையா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திரு.து.துளசிராமன் அவர்களுக்கும் நாம் பெரிதும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
குறியீடுகள் மட்டுமல்ல… பிற்கால எழுத்தமைதிக்குச் (15-16ஆம் நூற்றாண்டு)சான்றாக விளங்கக் கூடிய ஓடும் கண்டறிந்து இருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
The new Indian express 07.11.19
தமிழ் இந்து 07.11.19
ஞாயிறு, 3 நவம்பர், 2019
பூவரசங்குப்பம் அருகே முதுமக்கள் தாழிகள்
பூவரசங்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் பட்டாச்சாரியார் திரு.பார்த்தசாரதி அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!
‘அருகில் முதுமக்கள் தாழிகள் இருக்கிறன்றன‘ எனும் தகவலைப் பகிர்ந்து கொண்டவர் அவர்தான்.
02.11.2019 சனிக்கிழமையன்று நாம் அங்குச் சென்றபோது, கை காட்டிவிட்டு நின்றுவிடாமல், பட்டாச்சாரியார் நம்முடனேயே பயணித்தார். தடயங்களை அடையாளப்படுத்தினார். மகிழ்ச்சி!
எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தை ஒட்டிவரக்கூடிய, தென்பெண்ணையின் கரை ஓரங்களில்...
அப்பப்பா! எங்கெங்குக் காணினும் முதுமக்கள் தாழிகள்! பானை ஓடுகளின் சிதறல்கள். குறிப்பாகக் கருப்புச் சிவப்புப் பானை ஓடுகள்!
இன்னும் ஏராளம் இருந்திருக்க வேண்டும். ஏன், செங்கற் கட்டுமானங்கள்கூட இங்குக் காணப்பட்டதாம்! எல்லாம் அழிந்துவிட்டன.
எஸ்.மேட்டுப்பாளையம் மேல்குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பணியின் போதுதான் ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன!
மேலும் அழிவுக்கு உள்ளாகாமல் தடுக்க வேண்டும். இருக்கும் தடயங்களைப் பாதுகாக்க வேண்டும்!
இந்தப் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, அந்தப் பகுதி மக்களுக்கும் இருக்கிறது!
இந்தப் பயணத்தில் வழக்கம்போல் தங்களை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், கொளுத்தும் வெயிலில், களப்பணியில் ஈடுபட்ட அன்பிற்கினியத் தம்பிகள் கிருஷ்ணா, விஷ்ணு ஆகியோரும் நம் நன்றிக்கு உரியவர்கள்!
‘அருகில் முதுமக்கள் தாழிகள் இருக்கிறன்றன‘ எனும் தகவலைப் பகிர்ந்து கொண்டவர் அவர்தான்.
02.11.2019 சனிக்கிழமையன்று நாம் அங்குச் சென்றபோது, கை காட்டிவிட்டு நின்றுவிடாமல், பட்டாச்சாரியார் நம்முடனேயே பயணித்தார். தடயங்களை அடையாளப்படுத்தினார். மகிழ்ச்சி!
எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தை ஒட்டிவரக்கூடிய, தென்பெண்ணையின் கரை ஓரங்களில்...
அப்பப்பா! எங்கெங்குக் காணினும் முதுமக்கள் தாழிகள்! பானை ஓடுகளின் சிதறல்கள். குறிப்பாகக் கருப்புச் சிவப்புப் பானை ஓடுகள்!
இன்னும் ஏராளம் இருந்திருக்க வேண்டும். ஏன், செங்கற் கட்டுமானங்கள்கூட இங்குக் காணப்பட்டதாம்! எல்லாம் அழிந்துவிட்டன.
எஸ்.மேட்டுப்பாளையம் மேல்குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பணியின் போதுதான் ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன!
மேலும் அழிவுக்கு உள்ளாகாமல் தடுக்க வேண்டும். இருக்கும் தடயங்களைப் பாதுகாக்க வேண்டும்!
இந்தப் பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, அந்தப் பகுதி மக்களுக்கும் இருக்கிறது!
இந்தப் பயணத்தில் வழக்கம்போல் தங்களை இணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், கொளுத்தும் வெயிலில், களப்பணியில் ஈடுபட்ட அன்பிற்கினியத் தம்பிகள் கிருஷ்ணா, விஷ்ணு ஆகியோரும் நம் நன்றிக்கு உரியவர்கள்!
தினமணி 03.11.2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)