அடடா… மகிழ்ச்சி… மகிழ்ச்சி…
நமக்கு மட்டுமல்ல… தமிழ்கூறும் நல்லுலகிற்கும் தான்!
கடந்த நவம்பரில் நமது களப் பயணத்தை செ.கொத்தமங்கலம் கிராமத்தில் தொடங்கினோம். இதோ… ஓராண்டாகிறது… இன்னமும் தொடர்கிறது, நம் பயணம்!
செ.கொத்தமங்கலம் தொடங்கிப் பல இடங்களில் உடைந்தத் தாழிகளை, கருப்பு சிவப்பு ஓடுகளின் சில்லுகளைத்தான் பார்க்க முடிந்தது. குறிப்பாக எழுத்துப் பொறிப்புகளைக், குறியீடுகளை நம்மால் (இங்கு நம்மால் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்) காண இயலவில்லை.
அந்த ஏக்கத்தை எஸ்.மேட்டுப்பாளையம் இப்போது தீர்த்து வைத்துள்ளது.
முழுமையானத் தாழிகளை நம்மால் பார்க்க முடிந்தது.
குறியீடுகளுடன் கூடிய ஓடுகளும் கிடைத்துள்ளன. மகிழ்ச்சி தானே..!
கி.மு.2-3 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஏறக்குறைய 2300 ஆண்டுகள்!
தமிழ் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது பூவரசங்குப்பத்தை அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையம்.
ஓடுகளின் மீது காணப்பட்டவை கீறல்கள் அல்ல குறியீடுகள் தான் என்பதில் தொடங்கி நமது அனைத்து விதமான ஐயங்களையும் தீர்த்து வைத்து, நமக்கு உதவியாக இருந்த, இருந்து வருகின்ற
தமிழகத்தின் தொல்லியல் அறிஞர் பெருமக்களான மதிப்பிற்குரிய திரு.ராஜகோபால் சுப்பையா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திரு.து.துளசிராமன் அவர்களுக்கும் நாம் பெரிதும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
குறியீடுகள் மட்டுமல்ல… பிற்கால எழுத்தமைதிக்குச் (15-16ஆம் நூற்றாண்டு)சான்றாக விளங்கக் கூடிய ஓடும் கண்டறிந்து இருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
The new Indian express 07.11.19
நமக்கு மட்டுமல்ல… தமிழ்கூறும் நல்லுலகிற்கும் தான்!
கடந்த நவம்பரில் நமது களப் பயணத்தை செ.கொத்தமங்கலம் கிராமத்தில் தொடங்கினோம். இதோ… ஓராண்டாகிறது… இன்னமும் தொடர்கிறது, நம் பயணம்!
செ.கொத்தமங்கலம் தொடங்கிப் பல இடங்களில் உடைந்தத் தாழிகளை, கருப்பு சிவப்பு ஓடுகளின் சில்லுகளைத்தான் பார்க்க முடிந்தது. குறிப்பாக எழுத்துப் பொறிப்புகளைக், குறியீடுகளை நம்மால் (இங்கு நம்மால் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்) காண இயலவில்லை.
அந்த ஏக்கத்தை எஸ்.மேட்டுப்பாளையம் இப்போது தீர்த்து வைத்துள்ளது.
முழுமையானத் தாழிகளை நம்மால் பார்க்க முடிந்தது.
குறியீடுகளுடன் கூடிய ஓடுகளும் கிடைத்துள்ளன. மகிழ்ச்சி தானே..!
கி.மு.2-3 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஏறக்குறைய 2300 ஆண்டுகள்!
தமிழ் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது பூவரசங்குப்பத்தை அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையம்.
ஓடுகளின் மீது காணப்பட்டவை கீறல்கள் அல்ல குறியீடுகள் தான் என்பதில் தொடங்கி நமது அனைத்து விதமான ஐயங்களையும் தீர்த்து வைத்து, நமக்கு உதவியாக இருந்த, இருந்து வருகின்ற
தமிழகத்தின் தொல்லியல் அறிஞர் பெருமக்களான மதிப்பிற்குரிய திரு.ராஜகோபால் சுப்பையா அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திரு.து.துளசிராமன் அவர்களுக்கும் நாம் பெரிதும் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளோம்.
குறியீடுகள் மட்டுமல்ல… பிற்கால எழுத்தமைதிக்குச் (15-16ஆம் நூற்றாண்டு)சான்றாக விளங்கக் கூடிய ஓடும் கண்டறிந்து இருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
The new Indian express 07.11.19
தமிழ் இந்து 07.11.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக