கனியிருப்பக் காய் கவர்ந்தற்று…
“எமப்புரமான விழுப்புரத்தில் பணியாற்றுவதே சவால் தான்”
பத்திரிகையாளர் நண்பர் நீலவண்ணன்
அவர்களின் பதிவு இது!
விழுப்புரத்துக்கு என்று எவ்வளவோ பெருமைகள். இதையெல்லாம் பொறுக்க மாட்டாத எவனோ ஒரு வழிப்போக்கன் எப்பவோ சொல்லிச் சென்றது, “விழுப்புரம் எமப்புரம்”.
உண்மையில், அரசுத் துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஒரு சொர்க்க பூமி!
இங்குப் பணியாற்றிய வருவாய், காவல் துறை அதிகாரிகள் பலரும் தங்கள் பணிக்காலத்திற்குப் பிறகு இங்கேயே செட்டிலாகி இருக்கின்றனர்.
ஏன், கேரளாவைச் சேர்ந்த டிஜிபி ஒருவரே விழுப்புரத்தில் செட்டிலானார் (அவர் இப்போது உயிருடன் இல்லை) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
விழுப்புரம் மாவட்டத்தின் உள்பகுதியிலும் கிழக்குக் கடற்கரை சாலையிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்த அதிகாரிகள் பற்றி பத்திரிகை நண்பர்களுக்குத் தெரியாதது இல்லை!
அதே நேரம், எதற்கும் ஆசைப்படாமல் யாருக்கும் கார் கதவினைத் திறந்துவிடாமல் யாரைப் பார்த்தும் கூழைக்கும்பிடு போடாமல்…
கடுமையான அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் குறைந்த காலமே விழுப்புரத்தில் சிறப்புடன் பணியாற்றிச் சென்ற அசோக் வர்தன் ஷெட்டி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும் ராஜீவ் குமார் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளையும் பார்த்த வரலாறும் விழுப்புரத்துக்கு இருக்கிறது.
அன்பு நண்பரே… அரசுத்துறை அதிகாரிகள் குறித்த உங்களின் பார்வை எப்படியும் இருக்கலாம். உங்கள் அனுபவத்தின் பாற்பட்டது. அதில் நாங்கள் தலையிட முடியாது.
அதற்காக, வந்தாரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும், அதுவும் வளமுடன் வாழ வைக்கும் விழுப்புரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம்: அன்புடன் வேண்டுகிறேன்!
நண்பரே, முடிந்தால் உங்களால் குறிப்பிடப்படும் அந்த அதிகாரி, தனதுப் பணிக்காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டார் என பத்திரிகையில் எழுதுங்கள்! எழுதமுடியும்! எழுதலாம்!
விழுப்புரம் மாவட்டத்தின் முதல் ஆட்சியரான திரு.அசோக் வர்தன் ஷெட்டி வந்த புதிதில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றியும் ஓராண்டில் அவர் ஏன் தூக்கப்பட்டார் என்பதையும் நேர்மையாக நான் பதிவு செய்து இருக்கிறேன்!
அன்பு நண்பர் நீலவண்ணன், விழுப்புரத்தை "எமபுரம்" என்று குறிப்பிட்டதால் தவிர்க்க முடியாத பதிவு இது!
“எமப்புரமான விழுப்புரத்தில் பணியாற்றுவதே சவால் தான்”
பத்திரிகையாளர் நண்பர் நீலவண்ணன்
அவர்களின் பதிவு இது!
விழுப்புரத்துக்கு என்று எவ்வளவோ பெருமைகள். இதையெல்லாம் பொறுக்க மாட்டாத எவனோ ஒரு வழிப்போக்கன் எப்பவோ சொல்லிச் சென்றது, “விழுப்புரம் எமப்புரம்”.
உண்மையில், அரசுத் துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஒரு சொர்க்க பூமி!
இங்குப் பணியாற்றிய வருவாய், காவல் துறை அதிகாரிகள் பலரும் தங்கள் பணிக்காலத்திற்குப் பிறகு இங்கேயே செட்டிலாகி இருக்கின்றனர்.
ஏன், கேரளாவைச் சேர்ந்த டிஜிபி ஒருவரே விழுப்புரத்தில் செட்டிலானார் (அவர் இப்போது உயிருடன் இல்லை) என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
விழுப்புரம் மாவட்டத்தின் உள்பகுதியிலும் கிழக்குக் கடற்கரை சாலையிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்த அதிகாரிகள் பற்றி பத்திரிகை நண்பர்களுக்குத் தெரியாதது இல்லை!
அதே நேரம், எதற்கும் ஆசைப்படாமல் யாருக்கும் கார் கதவினைத் திறந்துவிடாமல் யாரைப் பார்த்தும் கூழைக்கும்பிடு போடாமல்…
கடுமையான அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் குறைந்த காலமே விழுப்புரத்தில் சிறப்புடன் பணியாற்றிச் சென்ற அசோக் வர்தன் ஷெட்டி போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும் ராஜீவ் குமார் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளையும் பார்த்த வரலாறும் விழுப்புரத்துக்கு இருக்கிறது.
அன்பு நண்பரே… அரசுத்துறை அதிகாரிகள் குறித்த உங்களின் பார்வை எப்படியும் இருக்கலாம். உங்கள் அனுபவத்தின் பாற்பட்டது. அதில் நாங்கள் தலையிட முடியாது.
அதற்காக, வந்தாரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும், அதுவும் வளமுடன் வாழ வைக்கும் விழுப்புரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம்: அன்புடன் வேண்டுகிறேன்!
நண்பரே, முடிந்தால் உங்களால் குறிப்பிடப்படும் அந்த அதிகாரி, தனதுப் பணிக்காலத்தில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டார் என பத்திரிகையில் எழுதுங்கள்! எழுதமுடியும்! எழுதலாம்!
விழுப்புரம் மாவட்டத்தின் முதல் ஆட்சியரான திரு.அசோக் வர்தன் ஷெட்டி வந்த புதிதில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றியும் ஓராண்டில் அவர் ஏன் தூக்கப்பட்டார் என்பதையும் நேர்மையாக நான் பதிவு செய்து இருக்கிறேன்!
அன்பு நண்பர் நீலவண்ணன், விழுப்புரத்தை "எமபுரம்" என்று குறிப்பிட்டதால் தவிர்க்க முடியாத பதிவு இது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக