வெள்ளி, 3 ஜனவரி, 2020

குறளார்...

திருக்குறளார் வீ.முனிசாமி...

சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் எக்ஸ்பிரஸ் அதிபர் கோயங்காவை வென்று திண்டிவனம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினாரார் என்பது அனைவரும் அறிந்ததே!

“மக்களை நான் மூன்றுமணி நேரம்தான் சிரிக்க வைப்பேன். ஐயா, குறளார் மூன்று நாள் சிரிக்க வைப்பார்” நடிகவேள் எம்.ஆர்.ராதா சொன்னது.

ஐயாவின் “குறள்” தொண்டினை முழுவதும் அறிந்த அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், தமிழ்நாடு அரசின் சார்பில், “தமிழ்ப் பழங்கலை பண்பாட்டு இயக்ககம்” மற்றும் “திருக்குறள் நெறிபரப்பும் மையம்” ஆகியவற்றை ஏற்படுத்தி அவற்றின் இயக்குநராகக், குறளாரை நியமித்தார்.

ஏறக்குறைய நான்கு ஆண்டுகாலம் இப்பணிகளில் இருந்தார் குறளார். இக்காலக்கட்டத்தில்தான் அரசுப் பேருந்துகளில் குறள் எழுதும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

1981இல் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், குறளுக்காக ஒருநாளை ஒதுக்கித் தந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அந்த ஒரு நாள் நிகழ்ச்சியை, குறளாரைத் தலைமைத் தாங்கி நடத்தச் செய்தார்.

1994ஆம் ஆண்டு ஜனவரியில் குறளாருக்கு தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விருதினைப் பெறுமுன்னரே மறைந்தார், திருக்குறளார்!


குறளுக்காக, குறளாகவே வாழ்ந்தத் திருக்குறளார் வீ.முனிசாமி அவர்களின் நினைவுதினம் இன்று...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக