ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வீரப்பாண்டி கிராமத்தில்

திருக்கோவலூர் அருகே உள்ள வீரப்பாண்டி, தொல்லியல் தடயங்கள் நிறைந்தக் கிராமம்.

இப்பகுதியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சிலம்பரசன், தொல்லியலில் மிகுந்த ஆர்வம் உடையவர். தொடர்ந்துத் தேடலில் இருப்பவர்.

தொல்லியல் பொருள்கள் பலவற்றைத் தன் சேகரிப்பில் வைத்திருக்கிறார்.

நேற்று12.01.2020 ஞாயிறு, திருக்கோவலூர் வந்த ஆய்வாளர் திரு. ஒரிசா பாலு, பேராசிரியர் செல்லபெருமாள் ஆகியோருடன் என்னையும் தமது சொந்தக் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஊரின் புறத்தே பரந்து விரிந்து காணப்படுகிறது பெரிய ஏரி.

ஏரிக்குள் அங்கும் இங்கும் ஆக பெரியதும் சிறியதுமாக பாறைக் குன்றுகள் முளைத்துக் காணப்படுகின்றன.


அதில் ஒன்றை அடையாளப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர் சிலம்பரசன்.

குன்றின் மீது ஏறினோம். இடையில் அழகான குகைத் தளம். கீழ்வாலையில் பார்க்கிறோமே, அந்த மாதிரி!


அருகில் உள்ள ஓரு பாறை. வழவழப்பானது. சிரமப்பட்டு தான் ஏறினோம்.


இதில் தான் அந்தத் தொல்லியல் அடையாளங்கள் நிறைத்துள்ளன.


இன்னும் ஆவணப்படுத்தப் படாதவை என்றே கருதுகிறோம்.
விரைவில் ஆவணப்படுத்துவோம்.

ஆசிரியர் சிலம்பரசன் அவர்களுக்கு நம் நன்றி!

1 கருத்து: