திங்கள், 27 ஜனவரி, 2020

ஐயா கோ.விஜய வேணுகோபால் அவர்களுடன்

"எழுதறதுக்கு முன்னாடி, நீங்க யாருக்காக எழுதறீங்க? அப்டிங்கறத உள்வாங்கிக்கிட்டு எழுதுங்க"


புதுச்சேரியில் இன்று27.01.2020, மூத்தத் தொல்லியல் ஆய்வாளர் ஐயா கோ.விஜய வேணுகோபால் அவர்களை சந்தித்த போது, அவர் சொன்னது.


நிகழ்ச்சிகளில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். அவ்வளவாகப் பரிச்சயமில்லை.

இப்போது தான் முதன் முறையாக ஐயா அவர்களை நேரில் சந்திக்கிறேன். பேசுகிறேன்.


நேரமில்லை. கலந்துரையாடல் ஒன்றிற்கு அவர் போக வேண்டும். இப்போதும் பிரெஞ்சுக்காரர் ஒருவர் சைவ சித்தாந்தம் குறித்து, ஐயாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

ஆனாலும் இடைப்பட்ட நேரத்தில் ஐயா அவர்கள் நம்மிடம் நிறைய பேசினார். தொல்லியல், அரசியல் உள்ளிட்ட விசயங்களைப் பேசினோம்.


இன்னும் நிறைய பேச வேண்டும். இவரிடமிருந்து தெரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது.

விரைவில் மீண்டும் சந்திக்கிறோம்.


இப்போதைக்கு விடைபெற்றோம்..!

புதுவைக்கு அழைத்துச் சென்ற, இந்த சந்திப்புக்கு துணைநின்ற தம்பி விஷ்ணு Vishnu Stark வுக்கு நன்றி..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக