புதன், 15 ஜனவரி, 2020

ஏழுசெம்பொன் சிவாலயம்

ஏழுசெம்பொன்...

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கிராமம், “தம் அடித்தால் தர்ம அடி” என சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் பரபரப்பாக அடிபட்ட ஊர் இது. புகைப்பதற்கு எதிரான ஊர்க்கட்டுப்பாடு அந்தளவுக்கு!

கல்வெட்டுகள் இந்த ஊரை ஏழிசைமோகன் எனக் குறிப்பிடுகின்றன. காடவராய கோப்பெருஞ்சிங்கனின் பட்டப்பெயர்களில் ஒன்றுதான் ஏழிசை மோகன் என்பது.

இவரது ஆட்சிக் காலத்தில் இங்குள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களும் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம்.

சிவாலயம், திருக்காளத்தி உடைய நாயனார் கோயில் எனவும் வைணவ ஆலயம் தென்திருவேங்கட பெருமாய் கோயில் எனவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரிசா மன்னன் குமாரஹம்வீரர் என்பவரின் தமிழகப் படையெடுப்பின் போது (கி.பி.1463) இக்கோயில்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. பின்னர் விஜயநகரர் ஆட்சியில் சீரமைக்கப்பட்டன.

ஆனாலும் பிற்காலத்தில் சிவன் கோயில் மிகவும் சிதலமடைந்தது. நூற்றாண்டுகளைக் கடந்து அப்படியே காட்சியளித்து வந்தது.

கடந்த மாதம் போயிருந்தோம். மழைப் பெய்த பிற்பகல் வேளையில், கோயிலின் பழைய அமைப்பை நாங்கள் தரிசித்தது அதுதான் கடைசிக் காட்சி!


இந்த நிலையில் இக்கோயிலை சீரமைப்பது எனும் முடிவு செய்த ஊர்ப்பொது மக்கள் தற்போது அதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளனர்.




கடந்த வாரம் தொடங்கியப் பணியில், கோயில் முழுக்கப் பிரிக்கப்பட்டுவிட்டது.

ஓரிரு தினங்களில் புதிய கோயிலுக்கானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.



“கோயிலின் பழமை மாறாமல் அதே பாணியில் கட்டப்படும்” என உறுதியாகத் தெரிவிக்கிறார், இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரு.ரமேஷ்.

கோயில் திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புபவர்கள் இவரை, 7708463779 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புகைப்படங்கள்:
கண சரவணகுமார் திருவாமாத்தூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக