எப்படியும் 10 அடிகள் இருக்கலாம்! ஒரு பிரம்மாண்டத்தை நோக்கி தான் நகர்ந்து இருக்கிறது இந்தப் பாறை! ஆனால் ஏனோ அந்தச் சிற்பியின் முயற்சி முற்றுபெறவில்லை!
வலதுகை மடித்து தலைக்குக் கீழேயும்.. இடதுகை நேராகவும் தொங்கவிடப்பட்டு இருக்கிறது.
கிடந்த நிலையில் காட்சி தருகிறார் விஷ்ணு... செஞ்சி அருகே தொண்டூரில் இருக்கும் விண்ணாம்பாறை நம் நினைவுக்கு வருகிறது.
அதுபோன்ற முயற்சி இங்கும் நடந்திருக்கிறது.
விஷ்ணு தலைக்கு அருகில், தனித்தச் சிற்பமாக மகாலட்சுமி காட்சி தருகிறார்!
இவர்கள் மலையர்குல காலம், அதாவது 13வது நூற்றாண்டு ஆகலாம் என்கிறார் திருமதி Mangai Ragavan அவர்கள்.
"சிவன் படுத்திருக்கிறார். அவர் தலைமாட்டுல பார்வதி வெசனத்தோடு உக்காந்து இருக்காங்க" அந்தப் பகுதியில் மாடுகளை ஓட்டிச் சென்ற ஒருவர் சொன்னது.
சிரிப்பு வந்தது!
பாறைகள் சூழ்ந்த இடம். சில அடிகளில் பாறைகள் உடைக்கப்பட்டு இருக்கின்றன. சிற்பங்கள் இருப்பதால் இந்த இடம் தப்பி இருக்கிறது.
இது எந்த இடம்?
இடைச்சி கல் அருகில், ஆற்காடு கிராமம். விழுப்புரம் - திருக்கோவலூர் சாலை.
உடன் வந்து உதவிய ஆசிரியர் மூர்த்தி அவர்களுக்கு நன்றி..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக