‘மதவெறி
எதிர்ப்போம் - மனித நேயம் காப்போம்’ எனும் முழுக்கத்துடன் கூடிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்கு முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.இராம மூர்த்தி (சிபிஎம்) அவர்கள் இன்று (25.06.2017) ஏற்பாடு
செய்திருந்தார்.
விழுப்புரம்
போதி அகாடமியில்தான் இந்தக் கூட்டம் நடந்தது. 30 பேருக்குக் குறையாமல் இதில்
கலந்து கொண்டனர்.
பேசியவர்கள்
பெரும்பாலோர் பாஜக, ஆர்எஸ்எஸ், மோடியின் காவி அரசியல் குறித்து கடுமையாக
விமர்சித்துப் பேசினார்கள்.
(கடந்த
சில வாரங்களுக்கு முன்பு நடந்த நூல் அறிமுகக் கூட்டம் ஒன்றில், நாட்டில் இயங்கும்
கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சிம்மக் குரலில் கர்ஜித்த தோழர் ஒருவர்,
மறந்தும்கூட அதுபற்றி இங்குப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
நான்
பேசும்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி அவர்களுக்கு உள்ளூர்
அளவில் ஜனநாயக சக்திகளை திரட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.. அவரது
முயற்சி வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தினேன்.
பிஜேபி,
ஆர்எஸ்எஸ், மோடியின் மதவெறி அரசியலுக்கு எதிராக உள்ளூர் அளவில் அமைப்பு ஏற்படுத்த
வேண்டும் என இதில் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால், அமைப்பின்
பெயரில் ‘மதம்’
வார்த்தை வரக்கூடாது என்று சொல்லப்பட்டது.
பல
தரப்பட்டவர்களையும் இந்த அமைப்பில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதற்கான ‘செயல்தந்திரம்’ என்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கிடையே,
‘பிற்போக்கு எதிர்ப்பு இயக்கம்’ எனும் பெயரை பேரா.த.பழமலய் முன்மொழிந்தார். அது நிராகரிக்கப்பட்டது. பின்னர்
ஒருவழியாக ‘மதம்’ கலக்காத பெயர் ஒன்றைச் சூட்டினர்.
சரி,
இந்தப் புதிய அமைப்பிற்குப் பின்னணியிலும் ஏதாவது அரசியல் இருக்கிறதா?
‘இருக்கிறது’ என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார், முன்னாள் எம்எல்ஏ அவர்கள்.
‘அது
என்ன அரசியல்?’ நான்
கேட்டேன்.
‘அதை
இங்குச் சொல்ல முடியாது’ மீண்டும் அழுத்தமாகச் சொன்னார் அவர்.
தோழர்
குறிப்பிடுவது என்ன அரசியலாக இருக்கும்..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக