புதன், 28 ஜூன், 2017

வரலாற்றை மறைத்தக் கல்வித்துறை...

1940-50களில் தென்னார்க்காடு மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி,
மாவட்டப் பிரிவினைக்குப் பின்னர்
90களின் இறுதியில்
மாவட்டத் திட்ட அலுவலகம்,
அரசு இசைப் பயிற்சிப் பள்ளி,
மகளிர் மேனிலைப் பள்ளி,
அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி அலுவலகம்,
தற்போது, அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகம்.

இப்படியாக பல்துறைகளைச் சந்தித்த விழுப்புரத்தின் ஒரே கட்டடம் இதுவாகத்தான் இருக்கும்.

திரு.வி.க வீதியில் பெரியார் சிலைக்குப் பின்புறமாக அமைந்துள்ள இக்கட்டடத்தின் வயது 102.

ஆமாம், உண்மைதான். முன்சீப் நீதிமன்றம், பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை தொடங்கப்பட்ட போது, அதே வளாகத்தில் இந்தக் கட்டடமும் அமைக்கப்பட்டது.

தொடக்கத்தில் தென்னார்க்காடு மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் ஒரு பகுதி இயங்கிய இக்கட்டடம்தான் காலப்போக்கில் இத்தனை வடிவங்களையும் பெற்றது.

இந்தக் கட்டடத்தின் வயதைக் குறிக்கும் வகையில் இதன் முகப்பில் ‘1905 என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது.


2010இல் கல்வித்துறையிடம் இந்த இடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. அப்போது முகப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதே வேகத்தில், முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த ஆண்டையும் மறைத்து, புதிய முகப்பு (போர்டிகோ) அமைக்கப்பட்டது.


மறைக்கப்பட்டது சில எண்கள்தானே என கல்வித்துறையினர் நினைத்தார்களோ என்னவோ?

மறைக்கப்பட்டது சில எண்கள் அல்ல, கட்டடத்தின் வரலாற்றைச் சொல்லும் ஒரு முக்கிய குறிப்பு!


உரியவர்கள் இதை உணரவில்லை என்பதுதான் நம்முடைய வேதனை..!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக