' சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' நாம் அடிக்கடி சொல்வதுண்டு.
விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் பாருங்கள், சுவர் முழுக்கத் சித்திரங்கள்!
இந்தத் தூரிகைகளுக்குச் சொந்தக்காரர்கள், ' நம்ம விழுப்புரம்' குழுவில் உள்ள இளைஞர்கள் தாம்.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேல் இந்த ஓவியம் தீட்டும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். வாழ்த்துகள் நண்பர்களே!
விழுப்புரம் நகராட்சிப் பூங்காவின் வயது 67. இந்நகரத்தின் தனித்த அடையாளமாக இருப்பது.
இந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளுள் ஒன்றுதான், நம்ம விழுப்புரம்’ குழுவில் நண்பர்களின் வண்ணந் தீட்டுதல்.
இப்பணிகள் ஓரளவுக்கு நிறைவுற்ற நிலையில், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் இனிய நிகழ்வு இன்று (29.07.2018) காலை நடந்தது.
விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், நகராட்சி ஆணையர் ( பொறுப்பு) டாக்டர் எம்.டி.ராஜா ஆகியோருடன், பங்கேற்கும் வாய்ப்பு எனக்கும் வழங்கப்பட்டது.
வழக்கம் போல் பூங்காவின் வரலாற்றினைத் தொட்டுக் காட்டினேன். நண்பர்களுக்கு மகிழ்ச்சி. நமக்கு மன நிறைவு!
சமூகப் பணியில் தங்களை ஈடுபடுத்தி பணியாற்றி வரும் நம்ம விழுப்புரம் குழு நண்பர்களின் பணித் தொடர வாழ்த்துகள்..!
விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் பாருங்கள், சுவர் முழுக்கத் சித்திரங்கள்!
இந்தத் தூரிகைகளுக்குச் சொந்தக்காரர்கள், ' நம்ம விழுப்புரம்' குழுவில் உள்ள இளைஞர்கள் தாம்.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மேல் இந்த ஓவியம் தீட்டும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். வாழ்த்துகள் நண்பர்களே!
விழுப்புரம் நகராட்சிப் பூங்காவின் வயது 67. இந்நகரத்தின் தனித்த அடையாளமாக இருப்பது.
இந்த அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளுள் ஒன்றுதான், நம்ம விழுப்புரம்’ குழுவில் நண்பர்களின் வண்ணந் தீட்டுதல்.
இப்பணிகள் ஓரளவுக்கு நிறைவுற்ற நிலையில், நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் இனிய நிகழ்வு இன்று (29.07.2018) காலை நடந்தது.
விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், நகராட்சி ஆணையர் ( பொறுப்பு) டாக்டர் எம்.டி.ராஜா ஆகியோருடன், பங்கேற்கும் வாய்ப்பு எனக்கும் வழங்கப்பட்டது.
வழக்கம் போல் பூங்காவின் வரலாற்றினைத் தொட்டுக் காட்டினேன். நண்பர்களுக்கு மகிழ்ச்சி. நமக்கு மன நிறைவு!
சமூகப் பணியில் தங்களை ஈடுபடுத்தி பணியாற்றி வரும் நம்ம விழுப்புரம் குழு நண்பர்களின் பணித் தொடர வாழ்த்துகள்..!