திங்கள், 2 ஜூலை, 2018

விழுப்புரம்: போக்குவரத்து நெரிசல்

எல்லாம் சிவமயம் என்பது சைவர்களின் நம்பிக்கை.
எல்லாம் கயிறு மயம் என்பது விழுப்புரம் போக்குவரத்து போலீசாரின் நம்பிக்கை!

பாருங்களேன், நகரத்தில் எங்கும் பார்த்தாலும் கூம்புகளும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கயிறுகளுமாகத்தான் காட்சியளிக்கின்றன.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. மகிழ்ச்சி.

ஆனால் பலன்?

நேற்று கூட நேரு வீதியில், கூம்புகளுடன்இணைக்கப்பட்டக் கயிறை போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் திடீரென அரை ஆள் உயரத்துக்கு இழுத்துக் கட்ட, கடைகளுக்கு உள்ளே  சென்றவர்கள் குறிப்பாகப் பெண்கள் கயிறைத் தாண்ட முடியாத நிலை.

இதனால் கயிறை இழுத்துக் கட்டிய போலீஸ் அதிகாரிக்கும், நண்பர் பாபு அச்சகத்தார் பாபுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம்.இறுதியில் கயிறு தளர்ந்தது!

இந்த நெரிசல் விவகாரம் பூதாகரமாக இருப்பது பழைய பஸ் நிலையம் – காந்தி சிலை பகுதிதான்.

என்ன செய்யலாம்?

சாலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாகச் சொல்கிறார்கள்.செய்தால் நல்லதுதான். ஆனால் அது நீண்ட காலத் திட்டம்.

அது நடைமுறைக்கு வரும் வரை ஏதாவது செய்ய வேண்டுமே?

இதற்கு, போக்குவரத்து போலீசார் மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வணிகர்கள்

அனைவரும் இணைத்துத் திட்டமிடல் அவசியம்.

இப்படியான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இப்படி எல்லாம் ஒருங்கிணைவு இல்லாமல்
' நான் கட்டுவதைத் கட்டுவேன். நீ எப்படியாவது தாண்டித்தான் போக வேண்டும்' என்று சொல்வதெல்லாம்…

- விழுப்புரத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக