திங்கள், 23 ஜூலை, 2018

விழுப்புரம்: விடிந்தும் எரியும் தெரு விளக்குகள்

நம்ம மக்கள்
தெரு விளக்குகள் எரியலைன்னாலும் கவலைப்பட மாட்டாங்க
விடிய விடிய எரிஞ்சாலும் கவலைப்பட மாட்டார்கள்!

அவ்வளவு உத்தமர்களாக நாம மாறிட்டோம்.

இணைப்பில் உள்ள படங்கள் இன்று (24.07.2018) காலை சற்று நேரத்துக்கு முன்பு ( மணி 8.45) எடுக்கப்பட்டவை.

விழுப்புரம் கன்னியாகுளம் சாலையில் உள்ள சிவராமன் லே அவுட், வில்லியம் லே அவுட் 1,2,3 மற்றும் குறுக்குத் தெரு ஆகிய 5 தெருக்களில் காலை எட்டரை மணியைக் கடந்தும் தெரு விளக்குகள் எரிந்து கொண்டு இருக்கின்றன.

இன்று மட்டும் அல்ல. தினமும் இப்படித்தான்.

இத்தனைக்கும், வில்லியம் லே அவுட் முதல் தெருவில் உள்ள கம்பத்தில் தான் இதற்கான சுவிட்ச் பெட்டியும் இருக்கிறது.

இதை முறையாகச் செய்ய வேண்டியது நகராட்சி நிர்வாகம் தான். மறுக்கவில்லை.

இப்படியாக வீணாகிப் போகும் மின்சாரத்துக்கானக் கட்டணம், நம்ம வரிப்பணத்தில் இருந்து தான் போகிறது எனும் உணர்வு அந்தப் பகுதி மக்களிடம் இருக்க வேண்டாம்?

எல்லா விசயத்திலுமா' யார் வீட்டு எழவோ பாய் போட்டு அழவோ என்று இருப்பது?

இவ்வளவு சொல்றீங்களே, நீங்க என்ன செய்யறீங்க? நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

எதிர் தெருவில் வசிக்கும் நான்,
தினமும் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், காலம் கடந்து எரிந்து கிடக்கும் மின்

விளக்குகளை நிறுத்தும் திருப்பணியைச் செய்து வருகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக