திங்கள், 13 ஏப்ரல், 2020

விழுப்புரம்: இந்த ஆண்டு இலட்ச தீபம் இல்லை

“என் வாழ்க்கையில் இலட்ச தீபம் இல்லாமல் நான் பார்த்ததில்லை” மிக நீண்ட அனுபவசாலி மாதிரி பேசினான், என் 14 வயது மகன் சித்தார்த்தன். நான் சொன்னேன், “தம்பி என் அனுபவத்திலேயே நான் இப்படி பார்த்தது இல்லை.”

விழுப்புரத்தின் ஒட்டுமொத்த அனுபவமே இப்படி இருந்திருக்காது தான்.

இந்த ஊரின் ஒரே விழா, ஆஞ்சநேயர் கோயில் சார்ந்து நடைபெறும் இந்த இலட்ச தீபத் திருவிழா தான்.

திருவிழா என்னவோ பத்து நாள் தான். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் களைகட்டும் திரு.வி.க. வீதி.

கூடவே, தேர்வுகள் அனைத்தும் முடிந்து, கோடை விடுமுறையும் சேர்ந்து கொள்ளும். கொண்டாட்டத்திற்குக் கேட்கவே வேண்டாம்!

பத்திரிகையாளராக இருந்த போது, அல்சர் எனப் பொய் சொல்லி, ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் விடிய விடிய திருவிழாவில் சுற்றி வந்து இருக்கிறேன்.

 இப்படியான ஏராளமான அனுபவங்கள் உங்களில் பலருக்கும் இருக்கும்.

கொரோனோ அத்தனையையும் முடக்கிப் போட்டு விட்டது.  இந்த ஆண்டு இலட்ச தீபம் இல்லை. வெறிச்சோடி கிடக்கிறது திரு.வி.க.  வீதி!


வருடப்பிறப்பு,
வழக்கத்தை விட முடியாத பலரும் வந்து  கோயிலுக்கு வெளியே விளக்கேற்றி செல்கின்றனர்.



(இன்று 14.04.2020 செவ்வாய் காலையில் எடுத்தப் புகைப்படங்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக