1997 – 99. விழுப்புரம் மாவட்ட சன் டிவி செய்தியாளர் பணி.
வடக்கே ஓங்கூரில் இருந்து தெற்கே சின்னசேலம் வி.கூட்ரோடு வரை நம் சாம்ராஜ்யம் விரிந்திருந்தது.
இந்த இடைப்பட்ட பகுதியில் எது நடந்தாலும், எந்த விபத்து நடந்தாலும் நாம் தான் போக வேண்டும். செல்போன் போன்ற தொடர்புகள் எல்லாம் இல்லாத காலம் அது!
சிதம்பரத்தில் வாண்டையார் சகோதரர்கள் கைது செய்யப்பட்டது, புதுவையில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டது, கூவாகம் திருவிழா, விழுப்புரத்தில் ஜானகிபுரம், காட்பாடி ரயில்வே கேட் பிரச்சனைகள் போன்றவற்றை பதிவு செய்தது மறக்க முடியாது!
இவற்றில், ரயில்வே கேட் தவிர்த்து மற்ற செய்திகளில் “சன் செய்திகளுக்காக கோ.செங்குட்டுவன்” என நம் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஆமாம், சிறப்பு செய்திகளில் நம் பெயர் வருவது பெரிய விஷயம்!
அப்போது, 24 மணி நேர செய்தி சேனல் கிடையாது. தினசரி மூன்று முறை தான் செய்தி. நாம் நினைத்த விரும்பிய செய்திகளை எல்லாம் அனுப்பவும், ஒளிபரப்பவும் முடியாது.
நிர்வாகத்தில் ஒன்மேன் ஆர்மி தான். எதை ஏற்பது எதை விடுப்பது எனும் முடிவுகள் செய்தி ஆசிரியர் மட்டுமே எடுப்பது. செய்தி எடுக்கப் போகும் முன்பு அவரிடம் அது எந்த நேரமாக இருந்தாலும் ஒப்புதல் பெற வேண்டும்.
ஒருமுறை, முக்கிய பிரமுகர் ஒருவரின் சாராய டேங்கர் பிடிபட்டது. எஸ்.பி.ரவி பார்வையிட்டார். இதுபற்றி கேட்ட போது, “உங்களுக்கு எஸ்.பி.தான் சம்பளம் தருகிறாரா?” எனத் துணைக் கேள்வி எழுப்பப்பட்டது.
இன்னோரு சமயம், செஞ்சியில் மேம்பாலத்தை அமைச்சர் தா.கி.திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியைத் தவிர்க்க எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், மேற்கண்ட இரண்டு செய்திகளும் என் மூலமாக அல்லாமல், வேறு வழிகளில் சென்று ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கன.
அது எப்படி என்பதை இதுநாள் வரை நான் அறியேன்.
குறைந்த சம்பளத்தில் நிறைவான பணி செய்தோம்.
சொந்தமாக கேமரா வாங்குங்கள் என ஆலோசனை வழங்கப்பட்டு, கடன்காரனானோம்.
பேருதான் பெத்த பேரு. வேறு வழியில்லை. இரண்டே ஆண்டுகளில் அந்த நிர்வாகத்தில் இருந்து தானாக வெளியே வந்தோம்.
இப்போது தகவல் அறிகிறேன்: அந்த ஒன்மேன் ஆர்மி வெளியேற்றப்பட்டார் (அ) வெளியேறினார் என்று. இந்த நிர்வாகத்தில் ஏறக்குறைய28 ஆண்டு காலம் அவரதுப் பணி என்கிறார்கள்.
அவர் வெளியேறியது, வெளியேற்றப்பட்டது காரணம் யாது தெரியவில்லை?
----------------
சன் டிவியில், விழுப்புரம் மாவட்ட செய்தியாளரான எனக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.1000.
இது, முதன்முதலில் எனக்கு வழங்கப்பட்ட காசோலை.
அப்போதெல்லாம் வங்கிக் கணக்கு எதுவும் கிடையாது.
அதோ ஆரம்பிப்போம்.. அதோ ஆரம்பிப்போம் என்று மாதங்கள் செல்ல...
காலாவதியான இந்தக் காசோலையும் என்னுடனேயே தங்கிவிட்டது!
வடக்கே ஓங்கூரில் இருந்து தெற்கே சின்னசேலம் வி.கூட்ரோடு வரை நம் சாம்ராஜ்யம் விரிந்திருந்தது.
இந்த இடைப்பட்ட பகுதியில் எது நடந்தாலும், எந்த விபத்து நடந்தாலும் நாம் தான் போக வேண்டும். செல்போன் போன்ற தொடர்புகள் எல்லாம் இல்லாத காலம் அது!
சிதம்பரத்தில் வாண்டையார் சகோதரர்கள் கைது செய்யப்பட்டது, புதுவையில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டது, கூவாகம் திருவிழா, விழுப்புரத்தில் ஜானகிபுரம், காட்பாடி ரயில்வே கேட் பிரச்சனைகள் போன்றவற்றை பதிவு செய்தது மறக்க முடியாது!
இவற்றில், ரயில்வே கேட் தவிர்த்து மற்ற செய்திகளில் “சன் செய்திகளுக்காக கோ.செங்குட்டுவன்” என நம் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஆமாம், சிறப்பு செய்திகளில் நம் பெயர் வருவது பெரிய விஷயம்!
அப்போது, 24 மணி நேர செய்தி சேனல் கிடையாது. தினசரி மூன்று முறை தான் செய்தி. நாம் நினைத்த விரும்பிய செய்திகளை எல்லாம் அனுப்பவும், ஒளிபரப்பவும் முடியாது.
நிர்வாகத்தில் ஒன்மேன் ஆர்மி தான். எதை ஏற்பது எதை விடுப்பது எனும் முடிவுகள் செய்தி ஆசிரியர் மட்டுமே எடுப்பது. செய்தி எடுக்கப் போகும் முன்பு அவரிடம் அது எந்த நேரமாக இருந்தாலும் ஒப்புதல் பெற வேண்டும்.
ஒருமுறை, முக்கிய பிரமுகர் ஒருவரின் சாராய டேங்கர் பிடிபட்டது. எஸ்.பி.ரவி பார்வையிட்டார். இதுபற்றி கேட்ட போது, “உங்களுக்கு எஸ்.பி.தான் சம்பளம் தருகிறாரா?” எனத் துணைக் கேள்வி எழுப்பப்பட்டது.
இன்னோரு சமயம், செஞ்சியில் மேம்பாலத்தை அமைச்சர் தா.கி.திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியைத் தவிர்க்க எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், மேற்கண்ட இரண்டு செய்திகளும் என் மூலமாக அல்லாமல், வேறு வழிகளில் சென்று ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கன.
அது எப்படி என்பதை இதுநாள் வரை நான் அறியேன்.
குறைந்த சம்பளத்தில் நிறைவான பணி செய்தோம்.
சொந்தமாக கேமரா வாங்குங்கள் என ஆலோசனை வழங்கப்பட்டு, கடன்காரனானோம்.
பேருதான் பெத்த பேரு. வேறு வழியில்லை. இரண்டே ஆண்டுகளில் அந்த நிர்வாகத்தில் இருந்து தானாக வெளியே வந்தோம்.
இப்போது தகவல் அறிகிறேன்: அந்த ஒன்மேன் ஆர்மி வெளியேற்றப்பட்டார் (அ) வெளியேறினார் என்று. இந்த நிர்வாகத்தில் ஏறக்குறைய28 ஆண்டு காலம் அவரதுப் பணி என்கிறார்கள்.
அவர் வெளியேறியது, வெளியேற்றப்பட்டது காரணம் யாது தெரியவில்லை?
----------------
சன் டிவியில், விழுப்புரம் மாவட்ட செய்தியாளரான எனக்கு வழங்கப்பட்ட ஊதியம் ரூ.1000.
இது, முதன்முதலில் எனக்கு வழங்கப்பட்ட காசோலை.
அப்போதெல்லாம் வங்கிக் கணக்கு எதுவும் கிடையாது.
அதோ ஆரம்பிப்போம்.. அதோ ஆரம்பிப்போம் என்று மாதங்கள் செல்ல...
காலாவதியான இந்தக் காசோலையும் என்னுடனேயே தங்கிவிட்டது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக