நாலு வருஷத்துக்கு முன்னாடி 2018 செப்டம்பர் ல ஒரு நாள் மத்தியானம் கடலூர் தேவனாம்பட்டினத்தில் இருந்து மோட்டார் படகுல ஒரு கடல் பயணம்..
இந்தக் கடல் பயணம் ங்கறது எனக்கு முதல் அனுபவம் புது அனுபவமும் கூட.
ஆனாலும் நண்பர் பாபு அவர் குடும்பத்தினர் அப்புறம் நண்பர்கள் பிரபு, பாலா தமிழ் உள்ளூர் நண்பர் கமல் னு நண்பர்கள் பட்டாளமும் கூட வந்ததால பயம் ஓரளவுக்கு குறைஞ்சது ன்னு சொல்லலாம்.
கடலூர் துறைமுகம் வரைக்கும் ஆன பயணம் இது.
சுனாமியால பாதிக்கப்பட்ட தீவுக் கூட்டங்கள பாத்தோம்.
இதோ துறைமுகத்துத்துக்குள்ள போகுது மோட்டார் படகு.
நம்மை சுத்தியும் தண்ணீர். தனிச்சு விட்ட மாதிரி மனசுக்குள்ள பயம். மனசு படபடன்னு அடிக்குது.
அப்பதான் நண்பர் கமல் சொன்னாரு கடலூர் டைட்டானிக் கப்பலை பாக்கப் போறோம் ன்னு.
மனசுக்குள்ள இப்ப பெரிய எதிர்பார்ப்பு எட்டிப் பாக்குது.
அதோ கடலுக்குள்ள நீண்ட இரும்பு கம்பம் மாதிரி நின்னுட்டு இருந்துச்சு.
கமல் திரும்பவும் சொன்னாரு இது கம்பம் இல்ல. கடலுக்குள் மூழ்கி இருக்கும் கப்பலோட ஒரு பகுதி.
இப்ப அதுக்கு பக்கத்திலியே நம்ம படகு போகுது. சுத்தி வந்துச்சு. ஓ.. இதுதான் அந்த கடலூர் டைட்டானிக் கப்பலா?
நெருக்கத்துலப் பாத்தோம்.
1970களோட இறுதியில கடலூர் துறைமுகம் வந்த இந்த கப்பல் புயல் ல சிக்கி தரைதட்டி நின்னு இருக்கு. உடைஞ்சும் போயிருக்கு. அப்புறம் அப்டியே கடலுக்குள்ள மூழ்கிடுச்சாம்.
கப்பலோட உரிமையாளர் அப்பப்ப கடலூர் வருவாராம். சில்வர் பீச் ல நின்னு தன்னோட கப்பல பாத்துட்டு போவாராம். கொடும தான் இல்லீங்களா.
கடல் பயணம் ஒரு திகிலான அனுபவம் தான். கூடவே மூழ்கி இருக்கும் ஒரு கப்பலையும் ல்ல பாத்துட்டு வந்திருக்கோம்.
இதப் பத்திய நினைவுகள் எனக்குள் ஓடிக்கிட்டு இருந்துச்சு.
அப்பதான் புதுச்சேரியில் இருந்து நண்பர் ரமணி அவர் இப்ப இல்ல காலமாயிட்டார்.
அப்ப அவர் சொன்னாரு சார் இந்த கப்பல் விஜயகாந்த் படத்துல வந்திருக்கு அப்படின்னு.
நானும் ரமணி சொன்ன பிறகு தான் பாத்தேன்.
தூரத்து இடி முழக்கம். விஜயகாந்த் நடிச்சு 1980 டிசம்பர் ல வந்த படம். தேவனாம்பட்டினம் கடற்கரையில் எடுத்தப் படம்.
இந்த படத்துல வர்ற உள்ளம் எல்லாம் தள்ளாடுதே பாட்டு. நம்மலாள இன்னிக்கும் மறக்க முடியாத பாட்டு இல்லீங்களா?
படம் ஆரம்பிச்ச 20வது நிமிஷத்துல கதாநாயகனும் கதாநாயகியும் கடற்கரையில உக்காந்து பேசுவாங்க. அப்ப அவங்க பிண்ணனியில இந்த கப்பல் முழுசா தெரியும்.
அப்புறம் இன்னொரு காட்சியில கதாநாயகி கப்பலை காமிச்சு சொல்வாங்க:
இந்த கப்பல் கூட வேற ஒரு சீமையில இருந்து வந்து தான தரைதட்டுச்சு. அந்த மாதிரி நாமும் வேற ஒரு ஊருக்கு போனாக்கா நிம்மதியா வாழலாம் னு
அப்போ கதாநாயகன் விஜயகாந்த் சொல்வாரு தரைதட்டி நிக்கற கப்பல் மாதிரி நாம நிக்க வேணாம். நடுக்கடல்ல பயணமாகுற நாட்டுப் படகு போல தலைநிமிர்ந்து வாழலாம் னு.
இதுக்கு பிறகும் கூட தூரத்து இடி முழக்கம் படத்தோட பல இடங்கள் ல இந்த கப்பல் தலை காட்டும்.
தரைதட்டி முழுசா நின்னுட்டு இருந்த கப்பலோட கடைசி பாகத்தை தான் நாலு வருஷத்துக்கு முன்னாடி நாங்க பார்த்தது.
அப்புறம் 1980கள்ல எல்லாம் இந்த கப்பல வேடிக்கை பாக்கறது தான் கடலூர் மக்களோட பொழுது போக்கா இருந்துச்சு. இப்படியா ஒரு மாசி மகத்தப்ப கடற்கரைக்கு வந்த ஒரு கூட்டம் கப்பல பாக்க மீன்பிடி படகு ல போயிருக்காங்க. அப்ப அந்த படகு கடல் ல கவிழ்ந்த விபத்து ல 16 பேர் வரைக்கும் இறந்தாங்கலாம்.
இந்த சோக நினைவ நம்மோட பகிர்ந்து கிட்டாரு கடலூர் பற்குணம் அவர்கள்.
மாபெரும் சோகம் தான்.
அண்மையில விசாரிச்சேன். திரும்பவும் போய் அந்த கப்பல பார்க்கலாமா ன்னு. கடலூர் நண்பர்கள் சொன்னாங்க.
இப்ப அதுக்கூட இல்ல. அதுவும் கடலுக்குள் ள மூழ்கிடிச்சு ன்னு.
இப்போதைக்கு நம்ம கிட்ட எஞ்சி நிக்கறது மூழ்கிப் போன கப்பலோட நினைவுகள் மட்டும் தான்.
இதுபற்றிய அப்புறம் விழுப்புரம் யூடியூப் சேனல் பதிவைப் பார்க்க...
https://youtu.be/1vHgofv2N-c