நமக்குத் தொடக்கக் கல்வி எல்லாம், விழுப்புரம் ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த நவாப்தோப்பு தொடக்கப் பள்ளிதான்.
அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, நம் மாலைநேர பொழுதுபோக்கு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடல் தான்.
மாலைநேர தென்றல் காற்று நம் உடலைத் தழுவிச் செல்லும்.
அதே நேரம்
காற்றில் மிதந்து வரும் கரித்துகள்கள் நம் ஆடையை கழுவிச் செல்லும்.
ஆமாம். விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கரி என்ஜின்கள் செய்யும் குறும்புகள் இவை.
கூடவே எனும் அதன் ஹாரன் சத்தமும், ‘சிக்கு புக்கு' என என்ஜினின் இரைச்சலும் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அணையா அடுப்பு இங்குதான் முதன் முதலில் பார்த்தோம். கனன்றுக் கொண்டு இருக்கும் அதன் வாய்க்குள் சவுலில் எப்போதும் கரியை எடுத்துக் கட்டிக் கொண்டே இருப்பார்கள்.
கீழ்ப்பெரும்பாக்கம் கரி மேடு. அந்தப் பக்கம் போனாலே, காலில் கரித்துகளுடன் தான் வீடு திரும்ப வேண்டும்.
இப்போதெல்லாம் ரயிலில் ஏறியதும் ஜன்னலோர சீட்டுக்கு முண்டியடிக்கிறோமே.. அப்போது?
ஜன்னலோரமா? வேண்டவே வேண்டாம்.
என்ஜினில் இருந்து வெளியேறும் கரித் துகள், கண்ணுக்குள் சென்று உறுத்துமே, அந்த அவஸ்தை இன்னும் மறக்க முடியல.
இது எல்லாம் இன்றைய தலைமுறைக்குக் கிடைக்காத, நாம் தொலைத்து விட்ட அனுபவங்கள்.
கடந்த வாரம் சென்னை சென்றிருந்த போது, தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்,
அந்தக் கரி என்ஜினைப் பார்த்தபோது எழுந்த நினைவலைகள்..!
அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி, நம் மாலைநேர பொழுதுபோக்கு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடல் தான்.
மாலைநேர தென்றல் காற்று நம் உடலைத் தழுவிச் செல்லும்.
அதே நேரம்
காற்றில் மிதந்து வரும் கரித்துகள்கள் நம் ஆடையை கழுவிச் செல்லும்.
ஆமாம். விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கரி என்ஜின்கள் செய்யும் குறும்புகள் இவை.
கூடவே எனும் அதன் ஹாரன் சத்தமும், ‘சிக்கு புக்கு' என என்ஜினின் இரைச்சலும் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அணையா அடுப்பு இங்குதான் முதன் முதலில் பார்த்தோம். கனன்றுக் கொண்டு இருக்கும் அதன் வாய்க்குள் சவுலில் எப்போதும் கரியை எடுத்துக் கட்டிக் கொண்டே இருப்பார்கள்.
கீழ்ப்பெரும்பாக்கம் கரி மேடு. அந்தப் பக்கம் போனாலே, காலில் கரித்துகளுடன் தான் வீடு திரும்ப வேண்டும்.
இப்போதெல்லாம் ரயிலில் ஏறியதும் ஜன்னலோர சீட்டுக்கு முண்டியடிக்கிறோமே.. அப்போது?
ஜன்னலோரமா? வேண்டவே வேண்டாம்.
என்ஜினில் இருந்து வெளியேறும் கரித் துகள், கண்ணுக்குள் சென்று உறுத்துமே, அந்த அவஸ்தை இன்னும் மறக்க முடியல.
இது எல்லாம் இன்றைய தலைமுறைக்குக் கிடைக்காத, நாம் தொலைத்து விட்ட அனுபவங்கள்.
கடந்த வாரம் சென்னை சென்றிருந்த போது, தெற்கு ரயில்வே தலைமை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்,
அந்தக் கரி என்ஜினைப் பார்த்தபோது எழுந்த நினைவலைகள்..!