திங்கள், 20 ஆகஸ்ட், 2018

விழுப்புரம் கால்பந்தாட்ட போட்டி

தண்டபாணியார் கால்பந்து அகாடமி.

விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில், கடந்த பதினாறு ஆண்டுகளாக இயங்கி வரும் அமைப்பு.

இதன் சார்பிலான, சுதந்திர தின விழா கால்பந்தாட்டப் போட்டி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சிறப்பாகவே நடந்தது.

இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (19.08.2018) மாலை நடந்தது.

விழுப்புரம் டிஎஸ்பி சங்கர், இந்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் ஆகியோருடன் இவ்விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

அரசியல், வரலாறு, இலக்கியம் சார்ந்த மேடைகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்தது வரும் நமக்கு, இந்த விளையாட்டு மேடை அனுபவம் புதிதும் முதலாவதுமாகும்.

ஆனாலும், விளையாட்டில் முத்திரைப் பதித்த விழுப்புரம் ரயில்வே இன்ஸ்டியூட் மைதானம் மற்றும் நகராட்சிப் பள்ளியில் மைதானம் ஆகியவற்றின் சிறப்புகள் குறித்தும்,

இந்த மைதானங்களில் விளையாடி அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் வெற்றி பெற்ற வீரர்கள் குறித்தும் விரிவாகப் பேசினேன்.

விழுப்புரத்தின் இந்த விளையாட்டு வரலாறு மீண்டும் திரும்புகிறது.

தண்டபாணியார் கால்பந்து அகாடமி இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சிதான்.

உம். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கூட, தண்டபாணியார் கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

அந்த அணியின் வீரர்களுக்கு வாழ்த்துகள், வணக்கங்கள்..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக