ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

சென்னை நண்பர்கள் நலமன்றத்தில் புனிதவதிக்குப் பாராட்டு

சென்னை நண்பர்கள் நலமன்றத்தின் 33ஆவது ஆண்டு விழா
புரசைவாக்கம், தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் இன்று (26.08.2018) நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு.

சிறப்பு விருந்தினர், பசுமைத் தாயகம் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவிலும், வந்திருந்த மாணவர்களில் முதலிடத்தையும் பெற்ற என் மகள் செ.புனிதவதி, இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டார்.


மகிழ்ச்சியான தருணம்!

விழாவில் முக்கிய விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்ற திரு. கி.தனவேல் ஐ.ஏ.எஸ். அவர்கள்,

முன்னதாக என் மகளிடம் பேசிய போது, வாழ்த்துக்கள் தெரிவித்த அவர்,
 பி.காம். படிப்புடன் யு.பி.எஸ்.சி. தேர்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அவற்றில் நீங்கள் தேர்ச்சி பெறுவதற்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்  எனக் கேட்டுக் கொண்டார்.


சிறப்பு வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அனுபவமிக்க வார்த்தைகள்.
கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றுதான்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக