புதன், 29 ஆகஸ்ட், 2018

சென்னை சென்ட்ரல் ரயில் மியூசியம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முகப்பில் அமைந்துள்ளது இந்தக் கண்ணாடியால் ஆன குளிரூட்டப்பட்ட அறை!

வெளியில் இருந்துப் பார்க்கும் போது, அலுவலகம் போன்ற ஒரு மிரட்சியை ஏற்படுத்தும்.

நானும் அப்படித்தான் பார்த்தேன். ஆனால் அந்த அலுவலகத்தின் பெயர்ப் பலகைதான் என்னையும் என் மகனையும் உள்ளே செல்ல உந்தியது.

'ரயில் மியூசியம்'

கண்ணாடிக் கதவைத் திறந்து தயக்கத்துடன் அடியெடுத்து வைத்தோம்.

உள்ளே பெண்மணி ஒருவர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தார்.
'பார்க்கலாமா?'
' உம். பாருங்க' . அனுமதி கிடைத்துவிட்டது.

சிறியதும் பெரியதும் ஆன  ரயில் பொம்மைகள்.

குழந்தைகள் பார்க்கலாம். சித்தார்த்தன் ரசித்தான்.



'புகைப்படம் எடுக்கலாமா?' மீண்டும் கேள்வி.
கேட்டுக் கொள்வது நல்லது தானே?

'தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்'.
மீண்டும் அனுமதி.

சித்தார்த்தனுக்குச் சொல்லவா வேண்டும்? வளைத்து வளைத்து படம் பிடித்தான். என்னையும் நிற்க வைத்து!



இந்த மியூசியம் ஐஆர்டிசி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது போதாது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்னும் விரிவாக்கப்பட்ட மியூசியம் தேவை.

ரயில் நிலையத்துக்கு உள்ளே இருக்கின்றனவே
நூற்றாண்டுக்கு முந்திய, பெரிய அளவிலான, கருப்பு வெள்ளைப்  புகைப்படங்கள்.

அருகில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் வளாகத்தில் அமைதியாக நின்று கொண்டு இருக்கிறதே
அந்தக் கால கரி என்ஜின்…

இவற்றினையும் உள்ளடக்கிய, விரிவுப்படுத்தப்பட்ட மியூசியம் அவசியம் தேவைதான்.

சரி, இருக்கின்ற இந்த சின்ன இடத்தையும் எத்தனைப் பேர் பார்த்திருத்கிறார்களோ யாம் அறியோம்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக