அம்மா…
உன் வாழ்நாளின் பெரும்பகுதி
விறகு அடுப்புடன் போராடினாய்!
உன் மூச்சுக் காற்றின் முக்கால்வாசி
அடுப்பூதும் ஊதாங்கோலில் கரைந்தது!
ஐந்து பிள்ளைகள்
அழகாய் ஈன்றெடுத்தாய்.
அதில் கடைக்குட்டியான என் மீதுதான்
உனக்குப் பாசம் அதிகம்.
நள்ளிரவைக் கடந்து நான்
வீட்டுக்கு வந்தாலும்
விழித்திருந்துச் சோறிடுவாய்.
பக்கத்தில் இருக்கும்
பேரங்கியூரில் உன் தாய் வீடு.
ஒரு நாள் கூட தங்கியதில்லை.
ஓடி வந்து விடுவாய் எங்களுக்காக...
உன்னைவிட்டு நான்
பிரிந்ததில்லை
என்னைவிட்டு
ஏன் பிரிந்தாய் அம்மா?
நீ மறைந்து நான்காண்டுகளாம்…
இல்லை இல்லை இன்றும் நீ
எங்களுடன்தான்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக