வி.மருதூர்.
விழுப்புரம் நகரத்தின் ஒரு பகுதி. ஆனால், கிராமியத் தன்மையை இழக்காத பகுதி!
இன்றும் கூட இந்தப் பகுதியில் தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
விடிய விடிய நடக்கும் தெருக்கூத்தினை, ஏராளமான ஆண்களும் பெண்களும் அமர்ந்து ரசிக்கின்றனர்.
இன்று காலை, அந்த வழியாக செல்லும் போது தான் கவனித்தேன், பதினெட்டாம் போர் காட்சி, அரங்கேறிக் கொண்டு இருந்தது.
நடிப்பு: முத்தாண்டிக்குப்பம் கலைஞர்கள்.
கூத்துக் கலைஞர்களை மட்டுமல்ல, அவர்களோடு மற்றும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
மகிழ்ச்சியாக இருந்தது!
இதேபோல், விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் கூட ஆண்டு தோறும் தெருக்கூத்து நடத்தப்பட்டு வருகிறது.
நம் மண்ணின் மணம் மாறாமல் அப்படியே வைத்திருக்க இப்போதும் போராடும் தெருக்கூத்துக் கலைக்கும், அதன் கலைஞர்களுக்கும் நம்முடைய வாழ்த்துகள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக