புதன், 15 ஆகஸ்ட், 2018

விழுப்புரம் லோகோ ஷெட் அலுவலகம் இடிப்பு

விழுப்புரம் வடக்கு இரயில்வே காலனியின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக இருந்தது.

பிரம்மாண்டமான இரண்டு அரச மரங்களுக்கு இ
டையில் அமைந்திருந்தது, அந்தக் கட்டடம்.

லோக்கோ ஷெட் பணியாளர்களுக்கான அலுவலகம் இங்கிருந்தக் கட்டடத்தில் தான் இயங்கி வந்தது.

அந்தப் பணிமனை தன் இருப்பை இழந்ததும், இந்தக் கட்டடமும் தன் அடையாளத்தை இழந்தது!

ஆனாலும், வடக்கு இரயில்வே காலனியின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாக நின்றிருந்தது.

காலனியில் உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே!

இதற்கு, இந்தக் கட்டடமும் தப்பவில்லை. முழுவதுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது.

நெடிதுயர்ந்த இரண்டு அரச மரங்கள் காற்றில் சலசலத்துக் கொண்டு இருக்கின்றன.

அதில் ஒரு மரத்தின் அடியில் இப்போதும் தலையில்லாமல் அமர்ந்து இருக்கிறார் புத்தர்!

இடிக்கப்பட்டு இருப்பது பழைய கட்டடம் மட்டும் அல்ல,

காலனியில் இருந்து, கீழ்ப்பெரும்பாக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறதே, அந்த நீண்ட மதிற் சுவர், அதன் ஒரு பகுதியும் கூட இடிக்கப்பட்டு உள்ளது!
எஞ்சிய மதிலும் இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை..!


(விழுப்புரம் கோ.செங்குட்டுவன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக