ஊர்ப் பெயர்கள், தமிழ் உச்சரிப்பில் உள்ளது போன்றே ஆங்கிலத்திலும் அமைய வேண்டும். இது, தமிழக அரசின் கொள்கை முடிவு!
இதற்காக மாவட்டங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களாக, மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், திருக்கோவலூர் கவிஞர் பாரதி சுகுமாரன், ஆசிரியர் கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருடன், நாமும் இடம்பெற்று இருக்கிறோம்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, “ஊர்களின் பெயர்கள் போகிறப் போக்கில் வைக்கப்பட்டது அல்ல. ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்தில் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.” எனும் வேதனையை வெளிப்படுத்திய நான்,
இதற்கு உதாரணமாக, நடிகர் ஜனகராஜ், அண்ணாமலை படத்தில், நேசமணி பொன்னையா என்பதை நாசமாய் நீ போனீயா என்று படிப்பாரே, அதைச் சுட்டிக் காட்டினேன்.
இதனால், கூட்ட அரங்கில் கலகலப்பு ஏற்பட்டது.
இந்த நகைச்சுவையில் பொதிந்து கிடக்கும் வருத்தத்தினை மாவட்ட ஆட்சியர் புரிந்து கொண்டார்.
ஊர்ப் பெயர்களுக்குப் பின்னால் உள்ள வரலாறு முக்கியம் என்பதை உணர்த்திய மாவட்ட ஆட்சியர், ஆங்கிலத்தில் பெயர் மாற்றும் போது வரலாற்றையும் கவனத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சுமார் ஒரு மணி நேரம் குழுவினருடன் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட வருவாய் அலுவலரும் கலந்துப் பேசினர்.
சம்பிரதாயத்துக்கு என்று இல்லாமல், உள்ளபடியே சிறப்பான ஆய்வுக் கூட்டமாக இன்றைய கூட்டம் இருந்தது.
மகிழ்ச்சி... அடுத்தடுத்தக் கூட்டங்கள் இருக்கின்றன.
இதற்காக மாவட்டங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலானக் குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களாக, மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், திருக்கோவலூர் கவிஞர் பாரதி சுகுமாரன், ஆசிரியர் கவிஞர் ஜெயக்குமாரி ஆகியோருடன், நாமும் இடம்பெற்று இருக்கிறோம்.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, “ஊர்களின் பெயர்கள் போகிறப் போக்கில் வைக்கப்பட்டது அல்ல. ஒவ்வொரு பெயருக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்தில் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.” எனும் வேதனையை வெளிப்படுத்திய நான்,
இதற்கு உதாரணமாக, நடிகர் ஜனகராஜ், அண்ணாமலை படத்தில், நேசமணி பொன்னையா என்பதை நாசமாய் நீ போனீயா என்று படிப்பாரே, அதைச் சுட்டிக் காட்டினேன்.
இதனால், கூட்ட அரங்கில் கலகலப்பு ஏற்பட்டது.
இந்த நகைச்சுவையில் பொதிந்து கிடக்கும் வருத்தத்தினை மாவட்ட ஆட்சியர் புரிந்து கொண்டார்.
ஊர்ப் பெயர்களுக்குப் பின்னால் உள்ள வரலாறு முக்கியம் என்பதை உணர்த்திய மாவட்ட ஆட்சியர், ஆங்கிலத்தில் பெயர் மாற்றும் போது வரலாற்றையும் கவனத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
சுமார் ஒரு மணி நேரம் குழுவினருடன் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட வருவாய் அலுவலரும் கலந்துப் பேசினர்.
சம்பிரதாயத்துக்கு என்று இல்லாமல், உள்ளபடியே சிறப்பான ஆய்வுக் கூட்டமாக இன்றைய கூட்டம் இருந்தது.
மகிழ்ச்சி... அடுத்தடுத்தக் கூட்டங்கள் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக